பிரஸ்காரர்கள் குறித்து காட்டமான கூட்டறிக்கை வெளியானதன் பின்னணியில் ஒருசில தயாரிப்பாளர்கள் தான் இருக்கிறார்களாம். ""பணம் இருக்குற தயாரிப்பாளர் மகராசன்கள் கொடுத்துட்டுப் போறாங்க. தேவையில்லாம மிரட்டல் அறிக்கைவிட்டு, பிரஸ்காரங்க பகைய சம்பாரிச்சதுதான் மிச்சம்.
இந்த அறிக்கை வர்றதுக்குக் காரணமே, பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்து ஓட்டாண்டியான ஒருத்தர்தான். இப்பக்கூட, சீன்லயே இல்லாத ஒரு டைரக்டரை வச்சு செகண்ட் பார்ட் படம் ரிலீஸ் பண்ணுனாரு. ஆனா படமோ பப்படமாகிருச்சு. இப்ப சீன்ல இருக்கும் ஒரு பிரபல டைரக்டரை வச்சு, பெரிய ஆர்டிட்ஸ்டுகளைப் போட்டு ஒரு படம் எடுத்து ரெண்டு வருஷ மாகியும் பெட்டிக்குள் ளேயே இருக்கு. இவரைப் போல சில ஓட்டாண்டிகள் தான் வேண்டாத வேலைய பார்க்குறாங்க'' என்கிறார் அந்த தயாரிப்பாளர்.
-நைட்மேன்