மலரும் நினைவுகளுக்கு
மகுடம் சூட்டி இருக்கிறாய்
மரணித்த
நடிகையர் திலகத்தை
மறக்கடிக்காமல்
புதுப்பித்திருக்கிறாய்
சேர நாட்டிலிருந்து வந்து
தென்னகத்தையே
வசப்படுத்தி
நீயும் இன்னுமொரு
நடிகையர் திலகமென
முடி சூட்டப்பட்டிருக்கிறாய்
நடிகையர் திலகமாய்
ஜொலித்தாலும்
நடிகையர் திலகமாய்
""வாழாதே''
-இப்படியெல்லாம் கவிதை மூலம் கீர்த்தி சுரேஷை அன்பாகவும் உரிமையாகவும் மிரட்டியிருப்பவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகின் முன்னணி பி.ஆர்.ஓ.வாக இருக்கும் "மௌனம்' ரவி தான்.