ன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக் கும் படம் "கடமான்பாறை.'

monsoorகதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி, இன்னொரு நாயகியாக ஜெனி பெர்னாண்டஸ் நடிக்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறிப்போகிறார்கள்.

Advertisment

அப்பா, அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியைக் கட்டடித்துவிட்டு. ஒரு மலைப்பகுதிக்குச் செல்கிறார்கள். அந்த கங்குவாரெட்டி மலை, கஞ்சமலையை தன்வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பன் மன்சூரலிகானிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர்கூட மாட்டிக்கொண்டால் உயிரோடு திரும்பமுடியாது. அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்தமுடியாது, கனிமவளங்களைத் திருட முடியாது, காட்டிலிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்தக் காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பித்தார்களா? இல்லையா என்பதுதான் "கடமான்பாறை'-யின் கதையாம்.