"புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில், கமலஹாசன் "தேவர் மகன்-2' படம் எடுக்கப்போவதாகவும், karunasஅப்படி எடுத்தால் அப்படம் முடங்கும்' எனவும் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும்? என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்ளே தவிர நீங்கள் இல்லை. "தேவர் மகன்' படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாகக் கூறியிருந்தீர்களே... ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும்மாதிரி எந்த ஒரு காட்சி யாவது அப்படத்தில் இருக்கிறதா? "தேவர் மகன்' படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடமுள்ள பகையை மையமாகக்கொண்டு எடுக்கப் பட்ட படம். அதில்கூட இறுதிக் காட்சியில் அனைவரும் பிள்ளைகளைப் படிக்கவைக்கச் சொல்லி அறிவுரையே வழங்கி யிருப்பார் கமலஹாசன்.

புராணக் கதைகளில் உள்ள வீரபாகுத்தேவர், வரலாற்றிலுள்ள புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரீபெல் முத்துராமலிங்க சேதுபதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பசும் பொன் திருமகனார் உட்பட பல வரலாற்றுப் பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களான எங்களைப் பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும்வரை திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம். யாரும் தடுக்கப் போவதில்லை.

மாஞ்சோலைத் தொழி லாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததுபோல் "தேவர் மகன்-2' படத்தை வைத்து தங்களை சாதித் தலைவராகக் காட்டவும், நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக் குரியது' என செம காட்டமாக நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் அறிக்கை விட்டுள்ளார்.

Advertisment