"தூத்துக்குடி' படத்தில் நாயகியாக நடித்து "கருவாப்பையா கருவாப்பையா' என்ற பாடல்மூலம் ரசிகர்கள் மனதில் இடத்தைப் பிடித்தவர் நடிகை கார்த்திகா.

k

தொடர்ந்து "பிறப்பு', "ராமன் தேடிய சீதை', "தைரியம்', "மதுரைசம்பவம்', "365 காதல் கடிதம்', "வைதேகி', "நாளைய பொழுதும் உன்னோடு' போன்ற படங்களில் நடித்த கார்த்திகா, தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார்.

தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா, நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயாராக உள்ளதாகக் கூறுகிறார்.