ன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் புதுப்பட முதல் ஷெட்யூல் டார்ஜிலிங்கில் முடிந்துள்ளது.

anjali

anjali

அங்கு பாபி சிம்ஹாவின் திருமண நிச்சயதார்த்த சீன் எடுத்துள்ளனர். இந்த சீனின் அட்மாஸ்பியருக்கு டார்ஜிலிங்கில் தமிழ் முகச்சாயல் கொண்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்டு கள் கிடைக்காததால், பீகார், டெல்லிலியில் இருக்கும் ஓரளவு தமிழ்ச் சாயல் கொண்டவர் களை வரவழைத்து ஷூட்டிங் நடத்தியிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். அடுத்த ஷெட்யூல் டேராடூனில் ஆரம்பமாகவிருப்ப தால், இந்த வாரம் சென்னையிலிருந்து கிளம்பிவிட்டார் ரஜினி.

Advertisment

மியூசிக் டைரக்டர் எஸ்.எஸ். குமரன் டைரக்ட் செய்துவரும் "எல்.ஐ.சி'. படம் வேகமாக வளர்ந்துவருகிறது.

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனை வைத்து "மதுரை வீரன்' எடுத்த பி.ஜி. முத்தையா, அடுத்ததாக அஞ்சலியை வைத்து "லிஸா' என்னும் பேய்ப்படத்தை சத்தமே இல்லாமல் எடுத்து முடித்துவிட்டாராம்.

தான் ஹீரோவாக நடித்த "அழகர்சாமியின் குதிரை',’ ‘"மன்னார்'’ படங்களின் ரிசல்ட் நெகட்டிவாகப் போய்விட்டதால், பத்தாயிரம் சம்பளம்னா பரவாயில்ல, ஐயாயிரம் சம்பளம்னாலும் ஓ.கே. என்னும் லெவலுக்கு வந்துவிட்டாராம் அப்புக்குட்டி.

Advertisment

டைரக்டர் சமுத்திரக்கனியிடம் ஆபீஸ் பாயாக வேலை பார்த்தவர் கருப்பசாமி என்ற இளைஞர். சமுத்திரக்கனி ஊரில் இல்லாத நேரத்தில், ஆபீசிலேயே சரக்கடித்துவிட்டு சலம்பல் பண்ணுவார்களாம் மேனேஜர் மோகனும் அவரது ஆட்களும். இதை ஒருநாள் கருப்பசாமி பார்த்துவிட, எங்கே வேலைக்கு வினையாகிவிடுமோ என நினைத்து, சம்பளம் அதிகமாக கேட்டு தகராறு செய்ததாகச் சொல்லிலி கருப்பசாமியை விரட்டிவிட்டார்களாம்.