கடந்தவாரம் காலை ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற "வைபவ் 2018' நிகழ்ச்சியைத் "திருட்டு ய ஈ உ' மற்றும் "மதுரை மாவட்டம்' படங்களில் நடித்துள்ள நடிகர் பிரபா கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.
விழாவில் மகளிர் கூட்டத்தில் பேசிய அவர், ""பெண்கள் கல்லூரி என்றதும் கொஞ்சம் பயந்து, தயக்கப்பட்டுத்தான் இங்கு வந்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்ததும் உங்களைக் கண்டு வியந்தேன். இங்குள்ள அனைவருமே அன்பைப் பொழிந்தார்கள். நீங்கள் ஆண்களைவிட மிகுந்த திறமைசாலிலிகளாக உள்ளீர்கள். பெண்கள்தான் இந்த நாட்டையும் வீட்டையும் தாங்குபவர்கள். நீங்கள் மிகுந்த தைரியத்துடன் இருக்கவேண்டும். எதிர்த்து போராடும் குணத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இது உங்களின் வாழ்வில் முக்கியமான பருவம். இப்போது படிப்பில் கவனம் செலுத்துங்கள். தாய், தந்தையை ஆசிரியரை மதியுங்கள். உங்கள் வாழ்வு இப்போது உங்களின் கடின முயற்சியில் உள்ளது. எல்லாரும் வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்'' என தயக்கமின்றிப் பேசினார்.