மே 25-ஆம் தேதி ரிலீசாகி, மாபெரும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றிருக்கும் "ஒரு குப்பை கதை' படத்தின் இயக்குனர் காளி ரங்கசாமி இந்தப்படம் குறித்து தனது அனுபவங்களை சொல்கிறார்...
""சத்தியமங்கலம் பக்கத்தில் வீரப்பனூர்தான் என் சொந்த ஊர். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவன். அப்படி இப்படி என போராடி இயக்குனர் எழிலிலிடம் உதவியாளராகச் சேர்ந்து பணியாற்றினேன். பின்னர் இயக்குனர் அஸ்லமிடம் இணை இயக்குனராகச் சேர்ந்து "பாகன்' படத்தில் வேலை பார்த்தேன். இதோ இப்போது "ஒரு குப்பை கதை' படம்மூலம் இயக்குனராகியுள்ளேன்.
இயக்குனர் அஸ்லம் எனது நீண்டகால நண்பர், உறவினர்... அவர் "பாகன்' படம் இயக்கியபிறகு, அவரைப்போல என்னையும் ஒரு இயக்குனராக்க
மே 25-ஆம் தேதி ரிலீசாகி, மாபெரும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்றிருக்கும் "ஒரு குப்பை கதை' படத்தின் இயக்குனர் காளி ரங்கசாமி இந்தப்படம் குறித்து தனது அனுபவங்களை சொல்கிறார்...
""சத்தியமங்கலம் பக்கத்தில் வீரப்பனூர்தான் என் சொந்த ஊர். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவன். அப்படி இப்படி என போராடி இயக்குனர் எழிலிலிடம் உதவியாளராகச் சேர்ந்து பணியாற்றினேன். பின்னர் இயக்குனர் அஸ்லமிடம் இணை இயக்குனராகச் சேர்ந்து "பாகன்' படத்தில் வேலை பார்த்தேன். இதோ இப்போது "ஒரு குப்பை கதை' படம்மூலம் இயக்குனராகியுள்ளேன்.
இயக்குனர் அஸ்லம் எனது நீண்டகால நண்பர், உறவினர்... அவர் "பாகன்' படம் இயக்கியபிறகு, அவரைப்போல என்னையும் ஒரு இயக்குனராக்கி அழகு பார்க்க விரும்பினார். எனக்காக பல தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்தார். ஒருகட்டத்தில் தனது பட வேலைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு நானே படத்தை தயாரிக்கிறேன் எனக்கூறி இந்தப்படத்தை ஆரம்பித்து என்னை இயக்குனராக்கினார். அவருடன் நண்பர்கள் ராமதாஸ், என். அரவிந்தன் ஆகியோரும் பின்னர் தயாரிப்பில் இணைந்து கொண்டனர்.
இந்தப் படத்தைத் தயாரிப்பதாக இயக்குனர் அஸ்லம் சொன்னபோது, நான் தயக்கத்துடன் முதல் படம் தயாரிக்கும் நீங்கள் கமர்ஷியலாக படம் தயாரிக்கலாமே. இது ரிஸ்க் இல்லையா என கேட்டேன். அதற்கு அஸ்லம் இந்தப் படத்திலும் கமர்ஷியல் இருக்கிறது. இது நல்ல கதை. நல்ல கதைதான் கமர்ஷியலாக வெற்றி பெறும். "மைனா', "ஜோக்கர்' என நம் கண்முன்னே உதாரணங்கள் இருக்கின் றன என தைரியமூட்டினார்.
நம் தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல், ஏதோ ஒருவிதத்தில் நாம் சந்திக்கும் கதாபாத்திரம்தான் குப்பை அள்ளும் மனிதர்கள். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் இவர்களின் கதாபாத்திரத்தை படத்தில் கொண்டு வரவேண்டும் என நினைப்பதுண்டு.
அதேசமயம் குப்பை அள்ளுபவர்களின் வாழ்க்கையை, அவர்களது பிரச்சனைகளை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கவில்லை. குப்பை அள்ளும் மனிதன் ஒருவனின் வாழ்க்கை, அவனது குடும்பம், அதில் ஏற்படும் பிரச்சினை என்றுதான் கதை சொல்லியிருக்கிறேன்'' என்றார் மகிழ்ச்சியுடன்.பிரபுதேவா நடித்த "மனதை திருடி விட்டாய்' படம்மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆனவர் தினேஷ். தற்போது "ஒரு குப்பை கதை' மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். .
ஹீரோ தினேஷ் என்ன சொல்றாருன்னா...""இயக்குனர் காளி ரங்கசாமி எனது எளிமையான தோற்றத்தைப் பார்த்து இந்தக் கதைக்கு நான் பொருந்துவேன் என நம்பினார். நான் பணியாற்றிய படங்களின் பாடல்களில்கூட கதையைவிட்டு வெளியே செல்லாமல்தான் நடனம் அமைப்பேன். அதனால் இதிலும் நடிக்கிறேன் என தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
அதனால் இயக்குனர் என்ன சொல்லிக்கொடுத்தாரோ அதை மட்டும் செய்துள்ளேன். இந்தப்படம் வெளியானபின் பலரிடம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தைப் பார்த்து பலர் திருந்தினாலும் திருந்தலாம்.
இந்தப் படத்தில் குப்பை அள்ளுபவராக நடித்துள்ளேன். இந்தப் படத்திற்காக குப்பை வண்டியுடன் சுற்றினேன். நிஜமாகவே குப்பைகளையும் அள்ளினேன். ஒரு குப்பையில் என்னவெல்லாம் இருக்கும் என நீங்கள் நினைப்பீர்களோ அதையெல்லாம் தாண்டி நினைக்காதது எல்லாம் அதில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். குப்பை அள்ளுபவர்களில் சிலர் அவற்றை சகித்துக்கொண்டு வேலை செய்வதற்காகவே குடிக்கிறார்கள் என்பதும், இன்னும் சிலர் குடிக்காமலேயே இந்த வேலையை செய்கிறார்கள் என்பதை நேரில் கண்டபோதுதான் உணர்ந்து கொண்டேன். குப்பை அள்ளுபவர்களின் உண்மையான சிரமங்களும் அவர்கள் எப்படி போற்றி வணங்கப்படவேண்டியவர்கள் என்பதையும் அறிந்துகொண்டேன்.
பொதுவாக குப்பை அள்ளுபவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக மாதம் இரண்டுமுறை தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். நானும் அப்படி ஊசி போட்டுக்கொண்டுதான் இந்தப் படத்தில் நடித்தேன்'' என்றார் உருக்கமாக.