வித்யா பிரதீப் ரொம்ப சந்தோஷமா இருக்கார். இதுவரை இப்படி ஒரு வாய்ப்பு அவருடைய கேரியரில் வந்ததே இல்லையாம்.
நான்கு படங்கள் கைவசம் இருக்கின்றன. நான்கும் நான்குவிதமானவை என்று பூரிக்கிறார். அருண்விஜய்யுடன் "தடம்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். நேர்மையான போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டுமென்று ரொம்ப நாளாகவே கனவு கண்டாராம்.
""அருள்நிதியுடன் "இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திலும் நல்ல கேரக்டர் கிடச்சிருக்கு. அதைப்பத்தி மட்டும் சொல்லமாட்டேன். "ஒத்தைக்கு ஒத்தை' படத்தில் அதர்வாவுடன் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். "களரி' படம் கேரளாவில் வளர்கிறது. அதில் கிருஷ்ணாவுடன் பியூட்டிசியனாக நடிக்கிறேன்'' என்று அடுக்குகிறார்.