"என்னமோ ஏதோ' படத்தில் துவங்கி "நாரதன்', அரவிந்த்சாமியுடன் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்', ஜிவி பிரகாசுடன் "ஆயிரம் ஜென்மங்கள்' மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிகிஷா
"என்னமோ ஏதோ' படத்தில் துவங்கி "நாரதன்', அரவிந்த்சாமியுடன் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்', ஜிவி பிரகாசுடன் "ஆயிரம் ஜென்மங்கள்' மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிகிஷா பட்டேல் தற்போது ஆரவ்விற்கு ஜோடியாக மார்க்கெட் ராஜா' என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஆரவ்விற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கவேண்டிய காட்சி உள்ளது. அதை நிகிஷா பட்டேலிடம் இயக்குநர் சரண் கூறுகையில், முதலில் நடிக்க மறுத்த நிகிஷா பட்டேல், முழுக்கதையையும் நிகிஷா பட்டேலிடம் கூறியபிறகு அந்தக் காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இதைப்பற்றி நிகிஷா பட்டேல் என்ன சொல்றாருன்னா...
""இந்தக் காட்சி படத்தில் மிகவும் முக்கியமான காட்சி என்பதால், முத்தம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் இந்தக் காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அது தப்பில்லை. மற்றபடி வல்கராவோ, முகம் சுளிக்கவைக்கும் காட்சி யாகவோ இருக்காது என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன். நான் சினிமாத் துறையை மிகவும் விரும்பிவந்தேன். அதோடு என்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவைப்படுகிறதோ அதை நிச்சயம் செய்வேன்'' என போட்டுத்தாக்கினார்.