லை, மூக்கு, கண், நாக்கு, பல் என தன் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் விலை நிர்ணயித்த நிலையிலும், "பத்மாவத்' படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகும். இல்லேன்ன்னா...

deepika

என துணிச்சலாக பேசியவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

ஒரு படத்தில் நடித்து முடிப்பதைவிட, அதை ரிலீஸ் செய்து விடுவதில் இருக்கும் சிக்கலை, படக்குழுவிலேயே அதிக சம்பளம் வாங்கிய அவருக்கு சமீபத்தில் ரிலீஸான "பத்மாவத்' உணர்த்தியிருக்கும்.

Advertisment

இதனால் ஏதாவது மன உளைச்சல் ஏற்பட்டதா என்றால், ""பத்மாவதி என்னை இன்னும் வலிலிமையானவளாக மாற்றியிருக்கிறது. சிலரின் வேண்டத்தகாத செயல்பாடுகள் என்னை மன அழுத்தத்தில் தள்ளிவிடவில்லை'' எனக்கூறியுள்ளார். தீபிகா, அவரது அம்மா உஜ்ஜாலா மற்றும் சகோதரி அனிஷா ஆகியோர் ஒன்றிணைந்து "தி லிலிவ் லவ் லாஃப் பவுண்டேஷ'னை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய தீபிகா, ""பணக்காரர்களுக்கும், செல்வாக்கானவர்களுக்கும்தான் மன அழுத்தம் வருவதாக சொல்வதே பொய். அதை முதலில் உடைத்தாகவேண்டும். சமூகத்தில் எல்லா நிலையில் இருப்பவருக்கும் மன அழுத்தம் சகஜமாகவே ஏற்படும்'' எனக் கூறினார்.