சாகடிக்கிறாய்ங்க -டைரக்டரின் கதறல் வெடி!

/idhalgal/cinikkuttu/im-dying-director

"ரெட்டச்சுழி' படத்தின்மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்த இயக்குநர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்குப் பிறகு "ஆண் தேவதை' படத்தை இயக்கி, பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக ரிலீஸானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது "ஆண் தேவதை.'

இந்நிலையில் இந்தப்படத்தை வெளியிடுவதற்குள் தாங்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப் பட்டோம், எவ்வாறெல்லாம் அலைக்கழிக்

"ரெட்டச்சுழி' படத்தின்மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்த இயக்குநர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்குப் பிறகு "ஆண் தேவதை' படத்தை இயக்கி, பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக ரிலீஸானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது "ஆண் தேவதை.'

இந்நிலையில் இந்தப்படத்தை வெளியிடுவதற்குள் தாங்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப் பட்டோம், எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்பட்டோம் என தனது மனக்குமுறல்களை கொட்டினார் இயக்குநர் தாமிரா.

thamira

""எனது "சிகரம் சினிமாஸ்' நிறுவனத்துடன் பக்ருதீன், முஸ்தபா, குட்டி என எனது மூன்று நண்பர்களையும் தயாரிப் பாளர்களாக சேர்த்துக்கொண்டு, ஒரு பைசாகூட வட்டிக்கு வாங்காமல் இந்தப்படத்தை எடுத்து முடித்தோம். இந்தப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை திருச்சியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு விற்றோம்.

ஆனால் அவர் முதல் கட்ட அட்வான்ஸ் தொகையாக 41 லட்சம் மட்டும் கொடுத்த தோடு சரி... அதன்பின் சொன்னபடி நடந்து கொள்ளவும் இல்லை. படத்தைக் குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்வதற்கு ஆர்வம் காட்டவும் இல்லை.. இதையெல் லாம் உணர்ந்து நாங்கள் சுதாரிப் பதற்குள் நிலைமை கைமீறி விட்டது.

thamiraபெடரேஷனில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார், நம்மை ஏமாற்றமாட்டார் என்று நம்பித்தான் அவரிடம் படத்தைக் கொடுத்தோம்.. ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இதற்குமுன் அவர் மற்ற விநியோகஸ்தர் களிடம் வைத்திருந்த கடன் பாக்கி எல்லாம் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு, அவற்றை எல்லாம் நாங்கள் செலுத்தி னால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமென பெடரேஷன் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இது எல்லா வற்றுக்கும் ஒரே காரணம் அவருடைய நிறுவனத்தின் பெயரில் எங்கள் படம் வெளியாகிறது என்பதுதான். காலம் கடந்துவிட்டதால் வேறு வழியின்றி படத்தை ரிலீஸ் செய்வதற்காக மாரிமுத்துவின் முந்தைய பாக்கிகளை நாங்கள் செட்டில்செய்து படத்தை ரிலீஸுக்கு நகர்த்திக் கொண்டுவந்தோம்.

இதன்காரணமாக இன்று வட்டிக்கு வட்டி கட்டும் சூழலுக்கு ஆளாகி இருக்கி றேன். இதற்கு இந்த மாரிமுத்துவும், அவரைப் போல மூன்றாம் தரமான நபர்களை ஆதரிக்கும் பெடரேஷனும்தான் காரணம். தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டால் நீங்கள் ஏன் அவரிடம் போய் சிக்கினீர்கள் என்றுதான் கேட்கிறார்கள்.

சிக்கியவர்களை காப்பாற்றத் தானே சங்கம் இருக்கிறது! எங்களை மோசடிசெய்த மாரிமுத்துமீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். நாளை இதே மாரிமுத்து தைரியமாக இன்னொரு படம் பண்ணு வார். அவரைப்பற்றிய விவரம் தெரியாமல் எங்களைப் போன்ற யாராவது ஒருவர் இனிமேலும் அவரிடம் சிக்கிவிடக்கூடாது என்கிற எண்ணத்தில்தான் இந்த உண்மைகளை வெளியிடு கிறேன்..

பெடரேஷனின் அலட்சி யம், அதிகாரப்போக்கு, தயாரிப்பாளர் சங்கம் சிறிய படங்கள்மீது காட்டும் பாராமுகம் இவை எல்லாமு மாகச் சேர்ந்து எங்கள் படத்தை சின்னாபின்னப் படுத்திவிட்டன. நாங்கள் தோற்கவில்லை- தோற்கடிக்கப் பட்டோம்'' என்று கொந்த ளித்துவிட்டார் தாமிரா.

cine131118
இதையும் படியுங்கள்
Subscribe