ப்பாடுபட்டாவது ஹீரோயின் ரேஸில் தனது மகளை ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் களம் இறங்கியிருக்கிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன். விஷாலுடன் "பட்டத்து யானை'-யில் அறிமுகமானார் ஐஸ்வர்யா அர்ஜுன். படம் நல்ல ரிசல்ட் என்றாலும் ஐஸ்வர்யாவுக்கு அதற்கடுத்து பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

arjun

பார்த்தார் அர்ஜுன், தனது மகளுக்காக தனது சொந்த பேனரில் "சொல்லிலிவிடவா' படத்தைத் தயாரித்து டைரக்ஷனும் பண்ணி கடந்த 9-ஆம் தேதி ரிலீசும் பண்ணிவிட்டார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது ஃப்ளாஷ்பேக்கையும் திரையுலக அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"" "நன்றி' படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு என்னை அறிமுகப்படுத்திய இராம. நாராயணன் சார் அவர்களுக்கு முதலிலில் நன்றி சொல்லிலிவிட்டு, "சொல்லிலிவிடவா' படத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் சொல்கிறேன்'' என்ற ஓப்பனிங்குடன் ஆரம்பித்தார் ஆக்ஷன்கிங். ""நான் மிடில்கிளாஸ் ஃபேமிலிலிதான். பிறந்தது மைசூரில். எனது அம்மாவுக்குச் சொந்த ஊரும் அதுதான். என்னுடைய தந்தை சக்திபிரசாத் கன்னடப்பட நடிகர். சினிமாவில் அவர் ரொம்ப கஷ்டப்பட்டதால், அவர் பார்வையில் சினிமா என்பது கஷ்டமானது.

Advertisment

arunson

நான் போலீஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என்பதுதான் அவரது கனவு. எப்படியோ சினிமாவுக்கு வந்து, தமிழ் ரசிகப் பெருமக்களின் ஆசியால் நல்லபடியாக இருக்கிறேன். தயாரிப்பு, டைரக்ஷன், விநியோகம் என பல வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தேன். டைரக்டர் ஷங்கர் போன்றவர்களால் நன்கு அடையாளம் காட்டப் பட்டேன்.

இப்போது எனது மகளுக்காக டைரக்ஷன் பண்ணி யிருக்கும் "சொல்லிலிவிடவா' படம் எல்லோருக் கும் நிச்சயம் பிடிக்கும்'' என மனசெல்லாம் நம்பிக்கை வழிய சொன்னார் அர்ஜுன்.