மொதல்ல டைரக்டர் மனீஷ் சர்மாவோடு லிங்க் பண்ணி பேசுனாங்க. இப்போ உதவி இயக்குநர் சாரிட் தேசாய்கூட சம்பந்தப்படுத்தி பேசுறது மட்டுமில்லாம, அவரைத்தான் கல்யாணம், பண்ணிக்கப் போறதா சொன்னாங்க.
இதை நீங்க மறுக்கிறீங்க ரைட்டு. அவரோட சேர்ந்து வாழ்றீங்களா?''னு ஒரு கேள்வியைப் போட்டா, அப்படியே பொங்குறாங்க ப்ரனீதி சோப்ரா.
""நான் என்ன செய்யப்போறேன்னு ஒவ்வொருநாள் காலையிலும் பட்டியல் போட்டு ஒங்களுக்கு சொல்லணுமா என்னா? நான் என்னோட வாழ்க்கையை வாழ்கிறேன். எதையும் மறைக்கனும்னு அவசியமில்லை. நான் சிங்கிளா, யார்கூடவாச்சும் ரிலேஷன் வச்சிருக்கனா என்பதை யெல்லாம் என்னைச் ச
மொதல்ல டைரக்டர் மனீஷ் சர்மாவோடு லிங்க் பண்ணி பேசுனாங்க. இப்போ உதவி இயக்குநர் சாரிட் தேசாய்கூட சம்பந்தப்படுத்தி பேசுறது மட்டுமில்லாம, அவரைத்தான் கல்யாணம், பண்ணிக்கப் போறதா சொன்னாங்க.
இதை நீங்க மறுக்கிறீங்க ரைட்டு. அவரோட சேர்ந்து வாழ்றீங்களா?''னு ஒரு கேள்வியைப் போட்டா, அப்படியே பொங்குறாங்க ப்ரனீதி சோப்ரா.
""நான் என்ன செய்யப்போறேன்னு ஒவ்வொருநாள் காலையிலும் பட்டியல் போட்டு ஒங்களுக்கு சொல்லணுமா என்னா? நான் என்னோட வாழ்க்கையை வாழ்கிறேன். எதையும் மறைக்கனும்னு அவசியமில்லை. நான் சிங்கிளா, யார்கூடவாச்சும் ரிலேஷன் வச்சிருக்கனா என்பதை யெல்லாம் என்னைச் சுத்தி இருக்கவுங்களுக்குத் தெரியும். எல்லாம் நீங்களே பரப்புற விஷயம்தான்'' என்று பொரிகிறார்.
பேங்கிங், பைனான்ஸ் சம்பந்தமா மான்செஸ்டர் பல்கலைக்கழகத்துல படிச்சுட்டு இந்தியா வந்தவரு, ராஜ் சோப்ரா புரொடக்ஷன்ல வேலை பார்த்தார். அடுத்த வருஷத்து லேயே அந்த கம்பெனியோட படத்துக்கு ஹீரோயினா புக் ஆயிட்டாரு. அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி விருதுகள் வரைக்கும் போனார்.
எட்டு ஆண்டுகள் ஆகிப் போச்சு. இப்போ பாடவும் செய்திருக்கிறார். பிரியங்கா சோப்ராவின் உறவுப் பெண்ணான இவர், அவருடனும் அவருடைய வெளிநாட்டு மாப்பிள்ளை நிக் ஜோனாஸுடனும் நெருக்கமாக இருக்கிறார்.
பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும் டேட்டிங்கில் இருந்தபோதே இவருக்கு தெரியுமாம். அவர்களுடன் இவரும் டூரெல்லாம் போயிருக் கிறாராம். எல்லாரும் கோவா போயிருந்தபோது, ""எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. இந்த லவ் வொர்க் அவுட் ஆகும்னு நெனக்கிறேன்'' என்று நிக்கிடம் சொன்னாராம்.
""வீட்டுக்குத் திரும்பிய பிறகு பிரியங்காவின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தேன்'' என்கிறார்.
மேலும், அவருடைய வாயைக் கிளறினால், ""நான் திருமணம் செய்துகொள்வேனா என்று கேட்டால் என்ன அர்த்தம்? நிச்சயமாக நானும் ஒருநாள் கல்யாணம் பண்ணத்தான் போறேன். ஆனால், அதற்குமுன் காதல் அவசியம். காதலித்து, எந்த வயதில் திருமணத்துக்கு தயாராவது என்பதெல்லாம் எனது மனநிலை சம்பந்தப் பட்டது. ஒருவேளை நாளைக்கே கூட இருக்கலாம். அதெல் லாம் நான் காதலிக்கும் ஆளைப் பொருத்தது.
இன்றிலிருந்து ஐந்து ஆண்டு கள் கழித்து நான் எப்படி இருப்பேன் என்றால், என்னால் எப்படி சொல்லமுடியும்?' அடுத்த அரை மணி நேரத்தில் என்ன நடக்கும் என்பதே தெரியாது. ஐந்து ஆண்டுகள் கழித்து எப்படி இருப்பேன் என்றெல்லாம் திட்டமிடமுடியுமா?
எதையாவது நான் சாதித்து, தனியாக செட்டில் ஆகவேண்டும் என்பதே எங்கள் குடும்பத்தில் எல்லாரின் விருப்பமாக இருக்கும். நான் சாதித்துவிட்டேன் என்ற எண்ணம் எப்போது எனக் குள் வருகிறதோ அப்போது கல்யாணம் செய்துகொள்வேன்'' என பொளந்து கட்டுகிறார் ப்ரனீதி சோப்ரா.
ப்ரனீதி சோப்ராவைப் பற்றிய லேட்டஸ்ட் நியூஸ் இது.
ஹாலிவுட்டில் தயாராகி வெற்றிகரமாக ஓடிய "தி கேர்ள் ஆன் தி ட்ரெய்ன்' என்ற படத்தை ரீமேக்கும் வேலை நடக்கிறது. இதற்காக ப்ரனீதி சோப்ரா இங்கிலாந்துக்கு போயிருக்கிறார். அவருடைய விடுமுறை தலம் என்றாலும், ""இந்த முறை வித்தியாசமான ஒரு கதாபாத்திரமாக வாழ்வதற்காக போகிறேன். எனது கதாபாத்திரம் மிகவும் வலுவானது. நான் சிரமப்பட வேண்டியிருக்கும்'' என்கிறார்.
""இது மனோதத்துவ அடிப்படை யிலான திரில்லர் படமாக இருக்கும்'' என்கிறார் டைரக்டர் ரிபு தாஸ்குப்தா.