சின்னத்திரை சங்கதிகள்! சீரியல் நடிகையின் கசமுசா காதல், அடிதடி!

/idhalgal/cinikkuttu/icon-clubs-serial-actress-kasamuza-love

ரே ஒரு படத்தில் ஒரு ஹீரோவும் ஒரு ஹீரோயினும் சேர்ந்து நடித்தால், அது சாதாரண மேட்டர். யாரும் எதுவும் பேசமாட்டார்கள். ஆனால், அவர்களே இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தால், "ரெண்டுபேருக்குள்ள ஏதோ இருக்கு...' என கோடம்பாக்கத்தில் லைட்டாக முணுமுணுப் பார்கள். அதுவே நான்கு படங்களில் நடித்தால்... "ரைட்டு கன்ஃபார்ம்தான்! ரெண்டுபேரும் டீப்பா லவ் பண்றாங்க.

mm

கண்டிப்பா கல்யாணம் தான்' என ஒட்டுமொத்த தமிழகமே கூடிக்கூடிப் பேசும். இந்தப் பேச்சு பல நேரங்களில் உண்மை யாகியிருக்கிறது. சில நேரங்களில் புஸ்வாணமாகியிருக்கிறது.

சினிமாவில் அப்படியென் றால்... வருடக்கணக்கில் ஒரே டி.வி. சீரியலில் நடிக்கும் நடிகர்- நடிகை மட்டும் சும்மா இருப்பார்களா என்ன...? சும்மாதான் இருக்க முடியுமா? டி.வி. சீரியலில் 200 எபிசோடு போனபின்பு, இவர்களின் காதல் எபிசோட் ஆரம்பிக்கும். 500 அல்லது 600-ஆவது எபிசோட் போய்க்கொண்டிருக்கும்போது கல்யாண எபிசோட் வந்துவிடும். 1,000-ஆவது எபிசோட் வரும்போது அவர்களின் இல்லற வாழ்க்கையில் குழந்தை எபிசோ

ரே ஒரு படத்தில் ஒரு ஹீரோவும் ஒரு ஹீரோயினும் சேர்ந்து நடித்தால், அது சாதாரண மேட்டர். யாரும் எதுவும் பேசமாட்டார்கள். ஆனால், அவர்களே இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தால், "ரெண்டுபேருக்குள்ள ஏதோ இருக்கு...' என கோடம்பாக்கத்தில் லைட்டாக முணுமுணுப் பார்கள். அதுவே நான்கு படங்களில் நடித்தால்... "ரைட்டு கன்ஃபார்ம்தான்! ரெண்டுபேரும் டீப்பா லவ் பண்றாங்க.

mm

கண்டிப்பா கல்யாணம் தான்' என ஒட்டுமொத்த தமிழகமே கூடிக்கூடிப் பேசும். இந்தப் பேச்சு பல நேரங்களில் உண்மை யாகியிருக்கிறது. சில நேரங்களில் புஸ்வாணமாகியிருக்கிறது.

சினிமாவில் அப்படியென் றால்... வருடக்கணக்கில் ஒரே டி.வி. சீரியலில் நடிக்கும் நடிகர்- நடிகை மட்டும் சும்மா இருப்பார்களா என்ன...? சும்மாதான் இருக்க முடியுமா? டி.வி. சீரியலில் 200 எபிசோடு போனபின்பு, இவர்களின் காதல் எபிசோட் ஆரம்பிக்கும். 500 அல்லது 600-ஆவது எபிசோட் போய்க்கொண்டிருக்கும்போது கல்யாண எபிசோட் வந்துவிடும். 1,000-ஆவது எபிசோட் வரும்போது அவர்களின் இல்லற வாழ்க்கையில் குழந்தை எபிசோட் வந்துவிடும்.

சினிமா நடிகர்- நடிகைகளில் காதல்- கல்யாணம்- அடிதடி- விவாகரத்துபோலவே இப்போது சின்னத்திரை ஏரியாவிலும் சகஜமாக நடந்துவருகிறது. சமீபத்தில் சந்தி சிரித்த சின்னத்திரை "கசமுசா' கள்ளக் காதல் விவகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்; படிப்போம்.

mmவிஜய் டி.வி.யில் ஒளிபரப்பான "ஆபீஸ்' சீரியல்மூலம் வில்லன் நடிகராக அறியப்பட்டவர் ஈஸ்வர். அதன்பின், "அதே கண்கள்', "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "பாவமன்னிப்பு', "சித்திரம் பேசுதடி' என 12-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து முடித்துள்ள ஈஸ்வர், இப்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிவரும் "கல்யாணப் பரிசு' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு இரண்டு மனைவிகள். (கரெக்டாத்தான் கேரக்டர் கொடுத்திருக்கார் டைரக்டர்) "பாவமன்னிப்பு' சீரியலில் நடிக்கும்போதே, அதே சீரியலில் தன்னுடன் நடித்த ஜெயஸ்ரீயை லவ் பண்ண ஆரம்பித்தார் ஈஸ்வர்.

ஜெயஸ்ரீயும் பல சீரியல்களில் நடித்திருந்தாலும், சன் டி.வி.யில் ஒளிபரப்பான ரம்யாகிருஷ்ணன் லீட் ரோலில் நடித்த "வம்சம்'தான் ஜெயஸ்ரீயை வில்லியாகப் பிரபலமாக்கியது. இந்த ஜெயஸ்ரீ, நடிகை மட்டுமல்ல; சிறந்த பரதநாட்டியக் கலைஞரும்கூட! கலைஞர் டி.வி.யில், டான்ஸ் மாஸ்டர் கலா தயாரித்த "மானாட மயிலாட' சீசன்-1-ல் முதல் பரிசு பெற்றவர்.

மூன்று வருடங்களுக்கு மேலாகக் காதலித்துவந்த ஈஸ்வரும் ஜெயஸ்ரீயும் 2016 ஜனவரியில் திருமணம் செய்துகொண்டனர். சென்னை, திருவான்மியூரில் மிக மகிழ்ச்சியுடன் போய்க் கொண்டிருந்த இவர்களின் இல்லற வாழ்க்கைக்கு சாட்சியாக பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ரெத்வா எனப் பெயரிட்டு ஆசையையும் அன்பையும் கொட்டிவளர்த்தனர்.

தனது ஆசைக் கணவருக்காக பணத்தை வாரி வாரி இறைத் தார் ஜெயஸ்ரீ. இதை நரித் தனமாகப் பயன்படுத்தி, ஷூட்டிங் இல்லாத நாட்களில் எந்நேரமும் சரக்கடித்துக்கொண்டு சூதாட்ட விடுதியே கதி என கிடப்பாராம் ஈஸ்வர். இந்தப் பழக்கங்களோடு "கசமுசா' கள்ளக் காதல் பழக்கமும் ஈஸ்வரிடம் வந்து ஒட்டிக்கொண்டது.

இப்போது ஜி டி.வி. யில் "தேவதையக் கண்டேன்' என்ற சீரியலில் நடித்து வரும் ஈஸ்வருக்கு, அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் மகாலட்சுமியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. (அது என்னப்பா வில்லியவே கரெக்ட் பண்றீக?). சன் டி.வி.யில் ஒளிபரப்பான "வாணி- ராணி' சீரியல்மூலம் ஃபேமஸானவர் மகாலட்சுமி. இந்த மகாலட்சுமிக்கும் அனில் என்பவருக்கும் 2016-ல் (அடடே வருஷம்கூட மேட்ச் ஆகுதே!) திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

mm

மகாலட்சுமியுடனான கள்ளக்காதல்வெறி கல்யாணம்வரை கொண்டு வந்து நிறுத்தியதால், ஜெயஸ்ரீயை தினமும் அடித்து கொடுமைப்படுத்தினார் ஈஸ்வர். இதற்கிடையே ஜெயஸ்ரீயை ஏமாற்றி 30 லட்ச ரூபாயை ஆட்டையைப் போட்டுவிட்டனர் ஈஸ்வரும் அவரது அம்மா சந்திரா வும். தாயும் மகனும் சேர்ந்து தினமும் அடித்துக் கொடுமைப் படுத்துவதை ஒருகட்டத்திற்குமேல் பொறுக்க முடியாமல், கடந்த சில நாட்களுக்குமுன்பு சென்னை அடையார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வர்மீதும், அவரது அம்மா சந்திராமீதும் புகார் கொடுத்ததுடன், தன்னிட மிருந்து அபகரித்த 30 லட்ச ரூபாயை மீட்டுத் தரும்படி கண்ணீர்விட்டுக் கதறியிருக்கிறார்.

ஈஸ்வரையும் அவரது அம்மா வையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரித்த போலீசார், ஜெயஸ்ரீயின் புகாரில் உண்மை இருப்பது தெரிந்ததும் இருவரையும் அரெஸ்ட் பண்ணி னார்கள். அதில் சந்திராவிடம் சில உறுதிமொழிகளை வாங்கிக்கொண்டு, சொந்த ஜாமினில் விட்டுள்ளனர்.

ஈஸ்வர் மட்டும் இப்போது புழல் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

நிலைமை இப்படி போய்க் கொண்டிருக்கும் போது... கடந்த 2-ஆம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார் ஜெயஸ்ரீ.

""ஈஸ்வரின் தாயார் சந்திராவிட மிருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. பெற்ற மகளையே ஒருமுறை பாலியல் கொடுமைக்குள்ளாக்கியவர் ஈஸ்வர். இப்போது எனக்கு போலீஸ் பாதுகாப்பு தந்து உதவுங்கள்'' என கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார் ஜெயஸ்ரீ.

பெற்ற மகளையே... என்ற பகீர் புகார் சின்னத்திரை வட்டாரத்தில் பீதியைக் கிளப்பியுள்ளது.

முக்கால்வாசி சீரியல்களின் பெண் கேரக்டர்கள், பலரின் குடியைக் கெடுத்து சந்தோஷப் படுவார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையிலேயே ஒரு நடிகையின் குடியை, இன்னொரு நடிகையின் கள்ளக்காதல் கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டது!

-ஈ.பா.பரமேஷ்வரன்

cini171219
இதையும் படியுங்கள்
Subscribe