படம் தயாரிக்கமாட்டேன் -டைரக்டரின் ஸ்டேட்மென்ட்!

/idhalgal/cinikkuttu/i-will-not-make-film-directors-statement

"சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தின் மூலம் நடிகராக களம் இறங்கி யிருக்கும் இயக்குநர் சுசீந்திரன் நம்மிடம் பேசினார்...

""படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின் எனது பெயரைக் கூறியிருக்கிறார். வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட

"சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தின் மூலம் நடிகராக களம் இறங்கி யிருக்கும் இயக்குநர் சுசீந்திரன் நம்மிடம் பேசினார்...

""படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின் எனது பெயரைக் கூறியிருக்கிறார். வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. இருப்பினும், இயக்குநர் சொல்வதை செய்யவேண்டுமென்ற மனநிலையோடு சென்றதால் நடித்து முடித்தேன்.

முதல் பாதி படம் பார்த்த என் குடும்பத்தார்கள், நடிப்பதில் நான் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டேனோ என்று நினைத்தார்கள். ஆனால், இரண்டாவது பாதி பார்த்து விட்டு மகிழ்ச்சியடைந்தார்கள்.

ss

இயக்குநராக நான் இன்னும் உச்சம் தொடவில்லை. அதன் பின்தான் நடிப்பில் கவனம் செலுத்துவேன். அதற்கிடையில், இதுபோல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அது பத்து நிமிட பாத்திரமாக இருந்தாலும்கூட.

"கென்னடி கிளப்', "ஏஞ்ச லினா' இந்த இரண்டில் எந்த படம் முதலில் வெளியாகும் என்று தெரியவில்லை. "ஏஞ்ச லினா' இக்கால இளைஞர் களுக்கான த்ரில்லர் படமாக இருக்கும். இந்த தலைமுறை யினரிடம் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். குறிப்பாக பெண்கள் பயத்துடன் இருப்பதால் தான் தோல்வியடைகி றார்கள். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், உலகத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை யும் கூறியிருக்கிறேன். இதில் பொள்ளாச்சி சம்பவமும் இடம்பெறும்.

"வில் அம்பு' படத்தின் இயக்குநர் என் நண்பர் என்பதால் அப்படத்தைத் தயாரித்தேன். மற்றபடி தயாரிக்கும் எண்ண மில்லை'' என்கிறார்.

"சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தில் தன்னை நடிகராக களமிறக்கிய இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பாவுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்து நன்றியைத் தெரிவித்திருக்கிறார் சுசீந்திரன்.

-பரமு

cine020719
இதையும் படியுங்கள்
Subscribe