"தேவா'-வில் விஜய்யுடனும், "வான்மதி'-யில் அஜீத்துடனும் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்துவிட்டு படிப்பு(?!) தான் முக்கியம் என்று ஹைதராபாத்திற்குப் பறந்தார் ஸ்வாதி. நீண்ட இடைவெளிக்குப்பிறகு அமீரின் இயக்கத்தில் வெளியான "யோகி' படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

s

தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது; தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கவும் தயார் என்கிறார்.

""நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் ரசிகர்கள் (எந்த ரசிகன் கேட்டான்) மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள் என்று ஆவலுடன் கேட்கிறார்கள். இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே(!!??) இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின்போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்துதான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்'' என போட்டுத் தாக்குகிறார் ஸ்வாதி.