இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சஜோசுந்தர் 'X வீடியோஸ்' என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்புத் தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது. படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகி ஜூன் 1-ல் ரிலீசாகியுள்ளது.
இந்தப்படம் பற்றிய தகவல்களையும் படம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கான பதில்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் சஜோ சுந்தர். ""இன்று இணையதளத்தில் நிர்வாணப் படங்களை வெளியிட்டு சமூ
இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சஜோசுந்தர் 'X வீடியோஸ்' என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்புத் தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது. படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகி ஜூன் 1-ல் ரிலீசாகியுள்ளது.
இந்தப்படம் பற்றிய தகவல்களையும் படம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கான பதில்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் சஜோ சுந்தர். ""இன்று இணையதளத்தில் நிர்வாணப் படங்களை வெளியிட்டு சமூகத்தை சீரழிப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது 'X வீடியோஸ்' என்கிற இணையதளம். இந்த இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கையில் எப்படி இவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம். அந்தவகையில் இது முழுக்க முழுக்க 'X வீடியோஸ்' என்கிற இணையதளத்திற்கு எதிரான படம். ரசிகர்களை ஈர்க்கும் விதமான தலைப்பாக இருக்கட்டும் என இந்த டைட்டிலை வைத்திருந்தாலும்கூட, 'X' என்றால் தவறு என்கிற கருத்தைத்தான் இதில் சொல்லிலியிருக்கிறோம். இது முழுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அரை நிர்வாணக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்றாலும், அவைகூட கதையின் தேவை கருதிதானே தவிர, எதுவும் வலிந்து திணிக்கப்படவில்லை. இந்தப் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் யாரும் இரண்டாந்தர படங்களில் நடிக்கும் நடிகர்கள் அல்ல.
எல்லாருமே கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். மக்களுக்கெதிராக நடக்கும் இதுபோன்ற தவறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தினால் கதைக்காக மட்டுமே அவர்கள் இந்தப் படத்தில் முழு மனதுடன் ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தை சென்சார் போர்டிலுள்ள ஏழு பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள். குறிப்பாக சென்சாரில் முக்கிய பொறுப்பிலுள்ள நடிகை கௌதமி இந்தப் படத்தை பாராட்டியதோடு, இதுபோன்ற படம் வெளிவரவேண்டும் என வாழ்த்து சொல்லிஇன்னும் நிறைய தகவல்களுடன் இந்தப் படத்தின் 2-ஆம் பாகத்தையும் நீங்கள் எடுக்கவேண்டும் என ஊக்கமும் கொடுத்தார்.
நம் வீட்டில் குளியல் அறையிலோ படுக்கையறையிலோ நம் ஸ்மார்ட் போனை வைத்து விட்டால்போதும். அதிலுள்ள வசதிமூலம் எங்கிருந்தோ ஒருவன் உங்கள் கேமராவை இயக்க முடியும்; படம் பிடிக்க முடியும்.
இந்த அதீத தொழில்நுட்ப பயங்கரம் யாருக்கும் தெரிவ தில்லை. இதற்கெல்லாம் பின்னணியில் இந்த "ஷ் வீடியோஸ்' என்கிற இணையதளத்திற்கு பக்கபலமாக செயல்படுவை மொபைல் "ஆப்' கள் (ஆல்ல்ள்)தான். இன்று தொட்டதற்கெல்லாம் ஆப் உபயோகப்படுத்துகிறார்கள். அவற்றை உங்கள் மொபைல் போனில் உள்ளீடு செய்யும்போதே உங்கள் போனிலுள்ள உங்களது அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொள்வோம் எனக் கூறி உங்கள் அனுமதியுடன்தான் அவர்கள் உங்கள் அந்தரங் கத்தில் கால் வைக்கிறார்கள்.
மிகப்பயங்கரமான தகவல் திருட்டை உங்கள் அனுமதி யுடனேயே அவர்கள் செய்கிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம். இதன் பின்னணியில் கோடிக்கணக்கில் வர்த்தகம் இருக்கிறது.
இயக்குனராக எனக்கு இது முதல் படம். இந்தப் படத்தின் மூலம் வருமானம் சம்பாதிக்கவேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. இந்தப் படத்திற்கு நான் செலவழித்த பணம் திரும்ப வந்தாலே, அதுவே போதுமானது. இந்தப் படத்தை பார்க்கும் மக்கள் இதன்பின்னராவது கொஞ்சம் உஷாராகி விடுவார்கள் என்றால் அது தான் எனக்கு லாபம்.
இது ஆபாசப்படம் அல்ல. ஆபாசத்தைப் பற்றிய படம். படத்திற் கான வரவேற்பு மக்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் என்மீது கல்லெறிகிறார்களா இல்லை பூக்களை வீசுகிறார்களா என்பதை அறிந்து கொள்ள காத்திருக்கி றேன்'' என சடசடவென உண்மையைப் பேசினார் சஜோ சுந்தர்.