ஹீரோயின்களும் காஸ்ட்யூம்களும்!

/idhalgal/cinikkuttu/heroines-and-costumes

டைகள் கலாச்சாரத்தை காலங்காலமாக சினிமாக்கள்தான் உருவாக்குகின்றன. தமிழ்ப் படங்கள் ஒருவிதமாகவும், இந்திப் படங்கள் ஒருவிதமாகவும் உடைகளை அறிமுகப்படுத்தின.

gangana

பெண்களுக்கு ஜாக்கெட் மாடல்களை சினிமாக்கள்தான் அறிமுகப் படுத்தின. சேலை டிசைன்கள் படத்தின் பெயருடன் விற்பனையாகின. குறிப்பாக பழைய படங்களில் அறிமுகமான ஜாக்கெட் மாடல்களை பின்னாளில் மீண்டும் சிறிய மாற்றங்களுடன் புதிய டிசைன்களில் அணியத் தொடங்கினார்கள்.

old-actress

ஆண்களின் தொளதொளா பேண்ட், கொஞ்சம் கொஞ்சமாக டைட் பேண்ட்டாக மாறும். தலைவழியாக மாட்டும் காலர் இல்லாத ஜிப்பா சட்டை, பின்னர் காலர் சட்டையாக, ஃபுல் ஓபன் சட்டையாக மாறியது. சட்டையிலும் டைட் சட்டைகள், இடுப்பில் எலாஸ்ட்டிக் வைத்த சட்டைகள் மாடல்களாகின.

ரவிச்சந்திரன் மாடல், ஜெய்சங்கர் மாடல், ஜெமினி கணேசன் மாடல் என்றெல்லாம் உடைகள் வந்தன. சரோஜா தேவி மாடல் ஜாக்கெட், பானுமதி மாடல் ஜாக்கெட் என்று நடிகைகளின் பெயரிலும் உடைகள் வந்தன.

1970-களில் இந்திப் படங்கள் புதிய உடை வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தின. அந்த உடைகளையே தமிழ்ப் படங

டைகள் கலாச்சாரத்தை காலங்காலமாக சினிமாக்கள்தான் உருவாக்குகின்றன. தமிழ்ப் படங்கள் ஒருவிதமாகவும், இந்திப் படங்கள் ஒருவிதமாகவும் உடைகளை அறிமுகப்படுத்தின.

gangana

பெண்களுக்கு ஜாக்கெட் மாடல்களை சினிமாக்கள்தான் அறிமுகப் படுத்தின. சேலை டிசைன்கள் படத்தின் பெயருடன் விற்பனையாகின. குறிப்பாக பழைய படங்களில் அறிமுகமான ஜாக்கெட் மாடல்களை பின்னாளில் மீண்டும் சிறிய மாற்றங்களுடன் புதிய டிசைன்களில் அணியத் தொடங்கினார்கள்.

old-actress

ஆண்களின் தொளதொளா பேண்ட், கொஞ்சம் கொஞ்சமாக டைட் பேண்ட்டாக மாறும். தலைவழியாக மாட்டும் காலர் இல்லாத ஜிப்பா சட்டை, பின்னர் காலர் சட்டையாக, ஃபுல் ஓபன் சட்டையாக மாறியது. சட்டையிலும் டைட் சட்டைகள், இடுப்பில் எலாஸ்ட்டிக் வைத்த சட்டைகள் மாடல்களாகின.

ரவிச்சந்திரன் மாடல், ஜெய்சங்கர் மாடல், ஜெமினி கணேசன் மாடல் என்றெல்லாம் உடைகள் வந்தன. சரோஜா தேவி மாடல் ஜாக்கெட், பானுமதி மாடல் ஜாக்கெட் என்று நடிகைகளின் பெயரிலும் உடைகள் வந்தன.

1970-களில் இந்திப் படங்கள் புதிய உடை வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தின. அந்த உடைகளையே தமிழ்ப் படங்களும் அறிமுகப்படுத்தும் நிலை உருவாகியது. "பாபி' என்ற இந்திப் படத்தில் ரிஷி கபூர் அணிந்துவந்த அகலமான காலர் வைத்த சட்டையும், அடிப்பகுதி விரிந்த பெல்பாட்டம் பேண்ட்டும் அன்றைய இளைஞர்களின் விருப்ப உடையாக மாறியது.

பிறகு அது மீண்டும் படிப்படியாக குறைந்து டைட் பேண்ட், டைட் சர்ட்டாக உருமாறியது. பெண்களுக்கு சேலை ஜாக்கெட், பாவாடை தாவணி மட்டுமே உடையாக இருந்த தமிழ்ப் படங்களில் எம்.ஜி.ஆர்தான் கதாநாயகிகளுக்கே அரைகுறை ஆடைகளை அணிவிக்கும் பழக்கத்தைத் தொடங்கி வைத்தார். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினிகணேசன் ஆகியோரின் படங்கள் அன்றைய இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் விரும்பக்கூடிய உடைகளை அறிமுகப்படுத்தின.

deepika

சேலைகளும், ஜாக்கெட் டுகளும், சட்டை டிசைன்களும் சில படங்களின் பெயருடன் பாப்புலராக வியாபாரம் ஆகின. அந்தவகையில் இன்றைக்கு, இந்தி சினிமாக்கள் உலகளவில் இந்திய ஆடைகளின் விற்பனைத் தூதராக மாறியிருக்கிறது. பழைய உடைகளாக இருந்தாலும் பாலிலிவுட் சினிமா உடை வடிவமைப்பாளர்களின் திறமையால் புதிய வடிவம் பெற்று பாப்புலர் ஆகின்றன. புதிய ட்ரெண்டை உருவாக்குகின்றன.

இன்றைய பாலிலிவுட்டில் அறிமுகப்படுத்தப்படும் உடைகள் கதரா, சந்தேரியா என்றவகை துணியால் உருவாக்கப்பட்டது. அது எந்தப் பகுதியைச் சேர்ந்த உடை? எங்கு அந்த துணிகள் நெய்யப்படுகின்றன என்பது உள்பட முழுவிவரங்களும் வெளியாகின்றன. அத்தகைய உடைகளுக்கு சிறப்பு உற்பத்தி ஆர்டர்களும் உடனடியாக கிடைக்கின்றன என்கிறார்கள்.

priyanka

சமீபத்தில் "மணிகர்னிகா' என்ற படத்தில் கங்கனா ரனாவத் அணிந்த உடை புதுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த உடையை நீட்டா லுல்லா என்பவர் வடிவமைத்திருந்தார். படத்தில் இந்த உடையைப் பார்த்தவர்கள், கதர் கிராமத் தொழில் கமிஷனிடம் பெரிய உற்பத்தி ஆர்டர் ஒன்றையும் வழங்கினார்கள்.

"பாஜிராவ் மஸ்தானி' படத்தில் பிரியங்கா சோப்ராவுக்காக தயாரித்த ஒன்பது கஜம் சேலை, "பத்மாவதி' படத்தில் தீபிகா படுகோனுக்காக வடிவமைத்த எம்ப்ராய்டரி ஜாக்கெட், சேலைகள் குறித்து பொதுவெளியில் ஏராளமான விசாரிப்புகள் இருந்தன. சரித்திரப் படங்களுக்காக உடைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. "பத்மாவதி' படப்பிடிப்பில் காவிகள் புகுந்து தீவைத்ததில் விலை மதிப்புவாய்ந்த ஆயிரம் உடைகள் எரிந்து நாசமானதாக செய்திகள் பரபரத்தன.

"மணிகர்னிகா' படத்திற்கான உடை வடிவமைப்பாளர் நீட்டா லுல்லா, சில ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த "ஜோதா அக்பர்' படத்திற்கும் ஆடம்பரமான உடைகளை வடிவமைத்திருந்தார். "மணிகர்னிகா' படத்திற்குப் பிறகு கதர் ஆடைகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்திருப்பதாக கதர் கிராமத் தொழில்கள் ஆணையர் சக்ஸேனா கூறியிருக்கிறார்.

ஒரு படம் வெளிவந்தவுடன் அதில் கதாநாயகியோ, கதாநாயகனோ அணிந்திருக்கிற உடை மாடல்களைப்போல வெவ்வேறு துணிகளில் உடைகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. ஆனால், இப்போது வசதிமிக்கவர் கள், அந்தப் படத்தில் எந்த துணியில் உடைகள் தைக்கப்பட்ட தாக அறிந்து அதே துணியில் உடைகள் வேண்டும் என்று கேட்கிறார்கள்.

"பத்மாவதி'-யின் உடைகள் வடிவமைப்பாளர்களான ரிம்பிள், ஹர்பிரீத் நருலாவுக்கு ஆர்டர்கள் குவிகின்றனவாம். அதிலும் குறிப்பாக படத்தில் உபயோகித்த அதே துணிகளையே விருப்பமாகக் கேட்கிறார்களாம்.

"பாஜிராவ் மஸ்தானி', "கோலிலியோன் கி ராஸ்', "லீலா ராம்லீலா' படங்களின் உடை வடிவமைப்பாளரான அஞ்சு மோடியும் இதையே கூறுகிறார். சம்பந்தப்பட்ட படங்கள் வெளியானவுடன்தான் ஆர்டர்கள் அதிகரிக்கின்றன என்கிறார்.

ishwarya

இவர் இப்போது ஆந்திரா உள்ளிட்ட மத்திய மாநில பாரம்பரிய உடைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். தெலுங்கில் உருவாகும் புதிய படத்திற்காக இந்த உடைகளை அவர் பயன்படுத்தப் போகிறார்.

"ஹம் தில் டே சுகே சனம்' என்ற படத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த பந்தினி லெஹேங்கே ஜாக்கெட்டுக்கு குவிந்த ஆர்டர்கள் ஏராளம் என்கிறார் அந்தப் படத்தின காஸ்ட்யூமர் நீட்டா லுல்லா.

"பண்டிட் குயீன்', "ஹைதர்' போன்ற படங்களின் காஸ்ட்யூம ராக பணியாற்றி தேசிய விருது பெற்றவர் டோல்லிலி அலுவாலிலியா. ""சரித்திரப் படங்களுக்காகத்தான் உடைகள் குறித்த ஆராய்ச்சி தேவை என்று சொல்கிறார்கள். ஆனால், "பிக்கு', "பாம்பே வெல்வெட்' போன்ற படங்களுக்கும் உடைகள் குறித்து ஆராய்ச்சி தேவைப்படுகிறது. ""ரசிகர்கள் தங்களுடைய ஹீரோவோ, ஹீரோயினோ அணிகிற உடைகளின் மாடல்களை பின்பற்ற விரும்புவது காலங்காலமாக வாடிக்கைதான்'' என்கிறார் இவர்.

-ஆசோ & ஈஷ்

இதையும் படியுங்கள்
Subscribe