ர்ஸ்ட் காபி புரொடக்ஷன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில், கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கியிருக்கும் படம் "சிறகு.' ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பலர் பேசினாலும் இங்கே சிலரின் பேச்சு.

நாயகி அக்ஷிதா ""நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

ss

Advertisment

எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. ஹீரோ ஹரியோட நடித்தது நல்ல அனுபவம். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. "அருவி' படத்தின் இயக்குநர்தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்.''

இயக்குநர் குட்டி ரேவதி ""இந்த டீமின் ஹம்பல்லில்தான் நான் நிற்கிறேன். இது மன மகிழ்ச்சி யான நாள். இவர்கள் அவைரையும் சந்தித்ததன் பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளரும் நிறைய பேசினோம். இரண்டுபேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின்தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு. வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். இந்தப் படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஒளிப்பதிவாளர் இந்தப் படத்தை ஒரு நகை வேலை செய்வதுபோல செய்திருக்கிறார்.

ஹீரோயின் அக்ஷிதா நின்னு விளையாண்டிருக்கிறார். நிச்சயமாக இந்தப் படத்திற்குப் பிறகு அவர் நெடுந்தூரம் பயணிப்பார். சரியாக திட்டமிட வேண்டுமென்பதையும், திட்டமிட்டபடி செயல்படவேண்டும் என்பதையும் மாலா மணியன் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்"" என்றார் தயாரிப்பாளர் மாலா மணியன் ""இந்த விழாவுக்கு பெரிய வி.ஐ.பி-க்களைக் கூப்பிடாததற்குக் காரணம் இந்த டீம் புதியது.

Advertisment

hh

இவர் களை இந்த விழா நாயகர்களாகக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் வேறு யாரையும் அழைக்கவில்லை. இந்தப்படம் எடுக்கும்போது ஒரே விஷயத்தை தான் நினைத்தேன். இந்தப் படத்தைப் பற்றி எப்போது நினைத் தாலும் மகிழ்வான நினைவாக இருக்க வேண்டுமென்று. அது அப்படியே நடந்துள்ளது.''

படத்தின் பாடல்களை பத்திரிகையாளர்கள் தேவிமணி, திரைநீதி செல்வம், கவிதா ஆகியோர் வெளியிட்டார்கள்.