லைத்தாய் பிலிம்ஸ் என்ற படநிறுவனம் சார்பில் பி.சி. பாலு தயாரிக்கும் படம் "கலாசல்'. இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிலிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

jovitha

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அஸ்வின் மாதவன். இவர் இயக்குனர்கள் சுந்தர். சி, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

""சினிமாவில் சாதனை புரிந்த பிரபல நடிகை அம்பிகாவின் மகன், இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

Advertisment

படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் இப்படியும் சொல்லலாம்.. மனிதனின் தேவைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றண. கடவுள்கிட்ட வேண்டிகிட்டு நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்திவிட்டு, வேண்டியதை கேட்டு பெறுவது பண்டம்மாற்று முறை மாதிரியான ஒரு வியாபாரம்தான்.

நாம வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள்மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை'' என்றார் இயக்குனர்.

Advertisment