தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் குழுவும், தென்னிந்திய திரைப் பட பத்திரிகைத் தொடர் பாளர்கள் யூனியனும் இணைந்து மிக முக்கியமான முடிவை எடுத்து அமல்படுத்தி வருகிறார் கள். இந்த முடிவை உண்மையான, உருப்படியா பத்திரிகையாளர்கள் ஏகமனதாக வரவேற்றிருக்கி றார்கள். இதைக் கடந்த "சினிக்கூத்து' இதழில் "கரெக்ட்... தப்பு... மிரட்டல்!' என்ற தலைப்பில் அட்டைப்படச் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
உண்மையான, உருப்படியான பத்திரிகையாளர்கள் மத்தியில் நமது செய்திக்கு ஏகோபித்த வரவேற்பு. ""சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி களுக்கு வரும் பத்திரிகையாளர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட மாட்டாது. வெறும் டீயும் பிஸ்கட்டும்தான் கொடுப்போம்'' என்பதுதான் இரு சங்கமும் இணைந்து எடுத்த நல்ல முடிவு. ஆனால் இதைப் பயன்படுத்திக்கொண்டு சில பி.ஆர்.ஓ.க்கள் தங்களை ஹீரோக்களாக நினைத்துக்கொண்டு தனி சாம்ராஜ்யம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
"ஓப்பனா அன்பளிப்பு கொடுத்தாத்தானே தப்பு? நாங்க வேற ரூட்ல இறங்குவோம்ல' என்ற கணக்குடன், பல டுபாக்கூர் பத்திரிகையாளர்களையும், உப்புமா வெப்சைட்(இப்பல்லாம் ஸ்மாட்ஃப
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் குழுவும், தென்னிந்திய திரைப் பட பத்திரிகைத் தொடர் பாளர்கள் யூனியனும் இணைந்து மிக முக்கியமான முடிவை எடுத்து அமல்படுத்தி வருகிறார் கள். இந்த முடிவை உண்மையான, உருப்படியா பத்திரிகையாளர்கள் ஏகமனதாக வரவேற்றிருக்கி றார்கள். இதைக் கடந்த "சினிக்கூத்து' இதழில் "கரெக்ட்... தப்பு... மிரட்டல்!' என்ற தலைப்பில் அட்டைப்படச் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
உண்மையான, உருப்படியான பத்திரிகையாளர்கள் மத்தியில் நமது செய்திக்கு ஏகோபித்த வரவேற்பு. ""சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி களுக்கு வரும் பத்திரிகையாளர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட மாட்டாது. வெறும் டீயும் பிஸ்கட்டும்தான் கொடுப்போம்'' என்பதுதான் இரு சங்கமும் இணைந்து எடுத்த நல்ல முடிவு. ஆனால் இதைப் பயன்படுத்திக்கொண்டு சில பி.ஆர்.ஓ.க்கள் தங்களை ஹீரோக்களாக நினைத்துக்கொண்டு தனி சாம்ராஜ்யம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
"ஓப்பனா அன்பளிப்பு கொடுத்தாத்தானே தப்பு? நாங்க வேற ரூட்ல இறங்குவோம்ல' என்ற கணக்குடன், பல டுபாக்கூர் பத்திரிகையாளர்களையும், உப்புமா வெப்சைட்(இப்பல்லாம் ஸ்மாட்ஃபோன் வச்சிருந்தாலே போதும், சினிமா நிருபர் தான்.) நிருபர்களையும் அழைத்துக்கொண்டு ஒரு தயாரிப்பாள ரிடம் போயிருக்கிறார் ஒரு பி.ஆர்.ஓ. ""இவுங்கெல்லாம் லீடிங் மேகசைன் ரிப்போர்ட்டர்ஸ், வெப்சைட் ரிப்போர்ட்டர்ஸ். நீங்க எப்படி எழுதணும்னு சொல்றீங்களோ, அப்படியே எழுதுவார்கள். தமிழ்நாட்ல அதிகம்பேர் பார்க்கும் வெப் சைட்ல இதுவும் ஒண்ணு'' என அள்ளிவிட்டு, 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய்க்கு விளம்பரம் பேசி முடித்துக் கொடுத்திருக்கிறார்.
அந்தக் கூறுகெட்ட குக்கரான தயாரிப்பாளரும் ஓ.கே.சொல்லி, கையில் ரொக்கத்துடன் அந்த டுபாக்கூர்களை அனுப்பியிருக்கி றார். ஆன் தி ஸ்பாட்டில் கமிஷனை வாங்கிக்கொண்டு போய்விட்டார் அந்த பி.ஆர்.ஓ. பல வருடங்களாக அஜீத் ரசிகர் மன்ற மாநிலத் தலைவராக இருந்து, பின் அஜீத்தின் மேனேஜராகவும் இருந்தவர் சுரேஷ் சந்திரா. அவரிடமிருந்து விலகியபின் சினிமா பி.ஆர்.ஓ.ஆனார். பெரிய பெரிய சினிமாக் கம்பெனிகள், பெரிய பெரிய ஹீரோக்களுக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்தார் சுரேஷ் சந்திரா. இவரின் வளர்ச்சியைப் பார்த்து முன்னணி பி.ஆர்.ஓ.க்களே ஆச்சர்யப்பட்டனர். தனது கால்ஷீட் எந்தக் கம்பெனிக்கு, டைரக்டர் யார் என்பதை அஜீத் தான் முடிவுசெய்வார். ஆனால் சுரேஷ் சந்திரவோ, ""நான் சொன்னா அஜீத் கால்ஷீட் கொடுப்பார்'' என பல தயாரிப்பாளர்களிடம் வாய்ஜாலம் காட்டுவார்.
இதெல்லாம் பழைய சமாச் சாரம். இப்ப கரன்ட் மேட்டருக்கு வருவோம். தயாரிப்பாளர் சங்கமும் பி.ஆர்.ஓ.சங்கமும் இணைந்து எடுத்த முடிவை தனக்கு சாதகமாக் கிக்கொண்டு சினிமா பத்திரிகை யாளர்களை இழிவுபடுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் சுரேஷ் சந்திரா. கடந்த 12-ஆம் தேதி "தோழர் வெங்கடேசன்', "தும்பா', "கொரில்லா', "கூர்கா' ஆகிய நான்கு படங்கள் ரிலீசாகின. பி.டி.செல்வகுமார் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றும் "தோழர் வெங்கடே சன்' படத்தின் பிரஸ் ஷோ, நடிகை லிசியின் லீ மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ தியேட்டரில் காலை 9.30 மணிக்கு நடந்தது. சுரேஷ் சந்திரா பி.ஆர்.ஓ.வாக இருக்கும் "தும்பா' படம் மதியம் 12 மணி, யுவராஜ் பி.ஆர்.ஓ.வாகப் பணியாற்றும் "கொரில்லா' பிற்பகல் 3.30-க்கு, சுரேஷ் சந்திராவின் "கூர்கா' மாலை 6.30-க்கு என மூன்று படங்களும் பிரசாத் லேப் தியேட்டரில் ஏற்பாடாகியிருந்தது. "இப்படி ஒரே நாளில் நான்கு படங்கள் இருந்தால் பத்திரிகை யாளர்களுக்கு சிரமமாக இருக்கும்.
அதனால் "கூர்கா' படத்தை மறுநாள் போடலாம்' என தயாரிப் பாளர் சொல்லியிருக்கிறார். ஆனால் சுரேஷ் சந்திரவோ, ""எத்தனை மணிக்குப் போட்டாலும் வருவார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் நீங்க ஏன் கவலைப் படுறீங்க?'' என பத்திரிகையாளர்களைப் பற்றி எகத்தாளமாக பேசியிருக்கிறார் சுரேஷ் சந்திரா. சுரேஷ் சந்திரா மேட்டர் ஓவர். நெக்ஸ்ட்... அடங்காத அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா வைப் பற்றிய மேட்டர் ஆரம்பம்.
இருசங்கமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் ""படங்களைப் பற்றி விமர்சித்தால் சும்மாவிட மாட்டோம்... வழக்குப் போடுவோம்...'' என மிரட்டியிருந் தார்கள். அந்த மிரட்டலையெல் லாம் உண்மையான, உருப்படியான பத்திரிகையாளர்கள் கண்டு கொள்ளவேயில்லை. ஆனால் டி.சிவாவோ திமிர்த்தனத்தைக் குறைத்த மாதிரி தெரியவில்லை.
"சூப்பர் டூப்பர்' என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் டி.சிவா பேசும் போது, ""தயாரிப்பாளர்களோ, சினிமாவோ விமர்சனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. தயாரிப் பாளர்கள் விமர்சனங்களை எதிர்ப்பதில்லை. அதே "சமயம்' பத்திரிகைகள் விமர்சித்தும் படங்கள் ஓடியிருக்கின்றன. அதனால சொல்றேன்... விமர்சனம் எல்லை மீறி னால்... சட்டரீதியாக நடவடிக்கை எடுப் போம் என எச்சரிக்கி றேன்'' என்று எல்லை மீறி பூச்சாண்டி காட்டிப் பேசியிருக் கிறார் டி.சிவா.
தரமான படங்களை எடுத்து வரும் தயாரிப்பாளர் ஒருவரிடம் நாம் பேசியபோது, ""டி.சிவா தயாரித்த "சார்லி சாப்ளின் -2' மண்ணைக் கவ்விருச்சு. எடுத்து ரெண்டு வருஷமாகியும் "பார்ட்டி' படத்தை ரிலீஸ் பண்ண வக்கில்ல. இந்த லட்சணத்துல பத்திரிகையாளர்களுக்கு எச்சரிக்கை வேற. இந்த சிவாவுடன் சேர்ந்துக்கிட்டு ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் சதீஷ்குமாரும் ஆட்டம் போட்டுக்கிட்டிருக்காரு. அந்த ரெண்டுபேரும் தயாரிச்ச படங் களில் பணியாற்றிய டெக்னீஷியன் களுக்கு சம்பளம் கொடுக்காம எத்தனையோபேர் வயிற்றில் அடிச்சிருக்காங்க. இப்ப நடந்துக்கிட்டிருக்கிற எல்லா அக்கப்போர்களுக்கும் சிவா வும் சதீஷும்தான் காரணம். சதீஷின் வேறொரு கூத்து பற்றிய சேதிய பிறகு சொல்றேன். அதனால சங்கத்தின் மூத்த உறுப்பினர் கள் கலந்து பேசி, நல்ல முடிவு எடுக்கும்வரை குழப்பக்கூத்துகள் நடந்துக்கிட்டுத்தான் இருக்கும்'' என்றார்.
-ஈ.பா.பரமேஷ்வரன்