சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் "கனா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் சினிமா வாழ்க்கை குறித்துப் பேசும்போது.... ""தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கே மதிப்பு இல்லை. மற்ற மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துக்கொண
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் "கனா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் சினிமா வாழ்க்கை குறித்துப் பேசும்போது.... ""தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கே மதிப்பு இல்லை. மற்ற மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் ஒரு அமைப்பு ஆரம்பித்து அதில் உறுப்பினராக அவர்களை சேரச்சொன்னால் அவர்கள் வருவார்களா...? ஹிந்தியில் ஹிந்திப் பெண்கள் நடிக்கிறார்கள்.
மலையாளத்தில் கேரளப் பெண்கள் நடிக்கிறார்கள். ஆனால், தமிழில் மட்டும்தான் தமிழ்ப் பெண்கள் பெரும்பாலும் நடிப்பதில்லை. ரெஜினா, சமந்தா இரண்டுபேரும்
நன்றாகத் தமிழ் பேசுவார்கள். ஆரம்பத்தில் அவர்களுக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைக்க வில்லை. பின்னாளில் அவர்கள் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக ஆன பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரித்து அவர்களை வரவேற்றது.
தன்ஷிகா நன்றாகத் தமிழ் பேசுகிற ஹீரோயின். ஆனால், அவருக்கு படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார், ஸ்ரீபிரியங்கா ஆகியோரும் இதேபோல் இருந்தும் அவர்களும் பெரிய படங்களில் நடிக்க முடிவதில்லை. இவ்வளவு ஏன், "மிஸ் இந்தியா' அழகிப் போட்டியில் பட்டம் வென்ற அனுகீர்த்திவாஸ் திருச்சிப் பெண். "மிஸ் இந்தியா' பட்டம் வாங்கியபிறகுதான் அனுகீர்த்தி யார் என்று நமக்குத் தெரிய வந்தது. இதுபோல் அனுகீர்த்தி கள் நிறைய பேர் இங்கு உள்ளனர். நாம்தான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். இது எல்லாவற்றையும்மீறி நம் பெண்கள் நடிக்கவந்தால் அவர்களை மதிக்க மாட்டார்கள். ஒழுங்காக சாப்பாடுகூட போட மாட்டார்கள். பாம்பே பெண்களுக்குக் கிடைக்கின்ற மரியாதையைவிட நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்கும். நம்ம ஊர்ப் பெண்கள் அதிகம் நடிக்க வந்ததுக்குப்பிறகு ஒரு அமைப்பு ஆரம்பித்து, அதில் பெண்களுக்கான பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தால் எனக்கு சந்தோஷம்தான். நான் அதுக்கான எல்லா விதமான உதவிகளையும் செய்வதற்கு ரெடி. சினிமாவில் பெண்களுக்கு நடக்கிற பிரச்சினைகள் எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய பக்குவம் எனக்கு வந்துவிட்டது. தவிர, எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய அமைப்புகளும், ஆட்களும் இருந்தார்கள் என்றால் நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வோம்'' என்று துணிச்சலாகக் கூறியுள்ளார்.
விக்ரமுடன் ஜோடி போட்ட "சாமி-2' ரிலீசாகப் போகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.