ஏமாற்றும் சூழல் இங்கே உண்டு -படவிழாவில் கே. பாக்யராஜ்!

/idhalgal/cinikkuttu/heres-frustrating-atmosphere-k-bhagyaraj

"நான் அவளைச் சந்தித்த போது' படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வி.டி. ரித்திஷ்குமார் பேசியது...

""இன்று என் வாழ்வில் முக்கியமான நாள். சினிமா விற்காக நல்ல கதை தேடிக் கொண்டிருந்தேன். எல்.ஜி. ரவிச்சந்தர் இக்கதையைச் சொன்னார்

"நான் அவளைச் சந்தித்த போது' படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வி.டி. ரித்திஷ்குமார் பேசியது...

""இன்று என் வாழ்வில் முக்கியமான நாள். சினிமா விற்காக நல்ல கதை தேடிக் கொண்டிருந்தேன். எல்.ஜி. ரவிச்சந்தர் இக்கதையைச் சொன்னார். மனதே உடைந்து போனது. இப்படம் ஒரு உண்மைச்சம்பவம். இந்தப் படத்தை எடுப்பதற்காக நிறைய சிரமப்பட்டிருக்கி றோம்.''

B

தயாரிப்பாளர் கே. ராஜன்

""இந்தப்படம் பெரிய வெற்றி யைப் பெற்று தயாரிப் பாளர் களுக்கு நஷ்டத் தைத் தராமல் இருக்க வேண் டும் என்று வாழ்த்து கிறேன்.''

நடிகர் சந்தோஷ் பிரதாப்

""கதைமீது இயக்குநருக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. சினிமா பின்னணி இல்லாதவர்களும் நிறைய பேர் சாதித்திருக்கிறார்கள். அது எனக் குப் பெரிய ஊக்கத்தைத் தரும். இங்கு அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பிவிடக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன்.''

இயக்குநர் எல்.ஜி ரவிசந்தர்

""இன்னைக்கும் நான் டூவீலர்லதான் போறேன். இன்னைக்கு சினிமாமேல் ரொம்ப பயமா இருக்கு. இந்த லைனை தயாரிப்பாளரிடம் சொன்னேன். வாழ்க்கையில் நடந்த இன்சிடெண்டைதான் சொன்னேன். உடனே அவர் படத்தை எடு என்றார். எனக்கு அதுவே மிகவும் பயமாக இருந்தது.''

கே. பாக்யராஜ்

""எனக்குத் தெரிஞ்சி இரண்டு பெட்ஷீட் வியாபாரி களை தயாரிப்பாளர்கள் ஆக்க முயற்சி நடந்த கதை உண்டு. இங்கு ஏமாறுவதற்கான சூழல் நிறைய உண்டு. இப்படத்தின் தயாரிப் பாளர் ரொம்ப நம்பிக் கையாக வந்திருக்கிறார். அவருக்கு ஏற்ற டீமும் அமைந்துள்ளது.''

cini241219
இதையும் படியுங்கள்
Subscribe