டந்த 15 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கும் ஹன்சிகாவின் 50-ஆவது படமாக உருவாகவுள்ள படம் "மஹா.' அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்க, ஜிப்ரான் இசை hanishkaஅமைப்பில், எலெக்ட்ரா என்டர்டெயின் மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இப்படம் ஒரு க்ரைம் திரில்லர் படமாக உருவாகவுள்ளது. இப்படம் குறித்து தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது... ""ஹன்சிகா தனது உச்ச நிலையில் இருந்து இறங்காமல் அங்கேயே நிலைத்து நிற்கும் திறன் படைத்தவர். அவருடைய அபரித மான அழகும் தனிப்பட்ட முறையில் அவர் செய்துவரும் தொண்டுகளும், ரசிகர்கள் மனதில் அவருக்கென்று நிலையான இடத்தைத் தந்து இருக்கிறது. அவருடைய இமேஜை மனதில் வைத்து, அவருடன் இரண்டு படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி உள்ள இயக்குநர் யு.ஆர்.ஜமீல், ஹன்சிகாவை மனதில் வைத்து கதையை எழுதியிருக்கிறார். என் நிறுவனத்தின் சார்பில் தரமான படங்கள் மட்டுமே தருவது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன்.

அதற்கு உகந்ததாக "மஹா' இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. தமிழ்த்திரை ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதிலும், இந்தப் படத்துக்குப் பிறகு ஹன்சிகா ஒரு இளவரசியாக தமிழ்த் திரை உலகில் நீடிப்பார் எனவும் நம்புகிறேன். மேலும் "மஹா' திரைப்படம் மூலம் ஹன்சிகாவுக்கு "இளவரசி' என்ற பட்டம் வழுங்குவதில் எங்கள் படக்குழுவினருக்கு பெரிய பெருமை'.

""இளவரசி ஹன்சிகா வாழ்க'' என மதியழகன் கோஷம் போடாத குறை ஒன்றுதான்'' என்றார்.

Advertisment