ஜி.வி. பிரகாஷ் நடிப்பில், சசி இயக்கத்தில் உருவான "சிவப்பு மஞ்சள் பச்சை' விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் இயக்குநர் எழில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துகொண்டு இருக்கிறார். சூர்யா, தனுஷ் நடிக்கும் படங்களுக்கு இசையமைத் துக்கொண்டும் இருக்கிறார். இவ்வளவு வேலைகளின் நடுவே சமூகம் சார்ந்த பல பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.

gv

""சினிமா துறை என்பது டாக்டர், வக்கீல் போன்ற ஒரு தொழில்.

Advertisment

அவ்வளவுதான். நாங்களும் சாதாரண மனிதர்களைப் போன்ற வர்கள்தான். பயணம் எங்கு தொடங்கு கிறதோ, புதிய கனவுகள் அங்கு மலரும், அந்த பயணத்தின் தொடர்ச்சி யாகதான் இசை. இசைக்குப் பின்பு நடிப்பு. தற்போது சமூகப் பணி. நான் இசையமைத்த போதிலும், நடித்த போதிலும் கிடைத்த கைதட்டல்களில் கிடைக்காத சந்தோஷம் சமூகம் சார்ந்த வேலைகள் செய்யும்போது மனதிற்கு மிகவும் ஆனந்தத்தைக் கொடுக்கிறது.

வெளிச்சத்துக்கு வராமல், அதே நேரத்தில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர்களை நானே நேரடியாக அவர்கள் இடத் துக்கு சென்று பேட்டி எடுத்து வெளியுல கத்துக்கு காட்ட உள்ளேன். "மகத்தான மாமனிதர்கள்' என்ற பெயரில் என்னுடைய யூ டியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும். சுதந்திரமாக இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக, லாப நோக்கு துளிகூட இல்லாமல் யூ டியூபில் வெளியிடு கிறேன்'' என்று மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் கூறுகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார்.