கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்து "கிரிஷ்ணம்' படம் உருவாகி யுள்ளது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல; இப்படத்தின் தயாரிப்பாளர் பி.என். பலராம்தான்.
கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்து "கிரிஷ்ணம்' படம் உருவாகி யுள்ளது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல; இப்படத்தின் தயாரிப்பாளர் பி.என். பலராம்தான்.
தனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்லவேண்டும் என்கிற நோக்கத்தில், தானே தயாரிப்பாளராகி இப்படத்தை எடுத்துள்ளார்.
அதேபோல தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறரால் நம்ப முடியாத- ஆனால் உண்மை யிலேயே நடந்த அற்புதமான அனுபவங்களை அனுப்புவோருக்குத் தங்கக் காசுகள் வழங்கப்போறாராம். "கிரிஷ்ணம்' தயாரிப்பாளர்.
அப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அதை வீடியோ பதிவாக்கி பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக், ஷேர் சாட் டிக் டாக் மூலம் அனுப்பிவைத்தால் ஐந்து நாளைக்கு ஒருமுறை தங்கக்காசு வழங்கவுள்ளதாக பி.என் பலராம் கூறியுள்ளார். இப்பரிசு மழை "கிரிஷ்ணம்' படம் வெளியாகும் வரை தொடரும்.
இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். அக்ஷய் கிருஷ்ணன், நாயகனாக நடிக்க, நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.