சாய் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே, ஆர். சர்வண் தயாரிக்கும் படம் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.'
விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றிவேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.
ஒளிப்பதிவு- கோபி ஜெகதீஸ்வரன், இசை- நடராஜன் சங்கரன், பாடல்கள்- விவேகா, கலை- வைரபாலன், நடனம்- கந்தாஸ், ஸ்டண்ட்- ரமேஷ், எடிட்டிங்- தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை- சுப்ரமணி, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர். முகேஷ்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்..
""வெற்றிவேல் ராஜாவின் மருந்துக்கடையில் வேலை பார்க்கும் விமல், சிங்கம்புலி இருவரும் அதிகப்படியான வருமானத்திற்காக சின்னச்சின்ன திருட்டுக்களைச் செய்பவர்கள். ஆனந்தராஜுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத ஒரு கடத்தல் பொருள் ஒன்று விமல், சிங்கம்புலி கோஷ்டியிடம் மாட்டிக்கொள்ள அவர்களை ஆனந்தராஜ் குரூப் துரத்த, வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரி மன்சூரலிகான், பூர்ணா கோஷ்டி துரத்த, தன் கடையில் கைவைத்துவிட்டார்கள்; அவர்களைப் பிடித்தே தீருவது என்று வெற்றிவேல் ராஜா குரூப் துரத்த, ஒரே துரத்தல் மயம்தான். இதை கிளாமர் ஹியூமர் என்று கலந்துகட்டி இருக்கோம்'' என்றார் இயக்குநர் ஏ.ஆர். முகேஷ்.