ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவி யாளராகத் திரைத்துறைப் பயணத்தைத் துவங்கி, 1996-ஆம் ஆண்டில் "வள்ளல்' என்ற திரைப் படத்தின்மூலம் ஒளிப்பதி வாளராகத் தமிழ்திரையுல கிற்கு அறிமுகமான ஒளிப் பதிவாளர் ராம்ஜி. தொடர்ந்து மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் கமர்ஷியல் திரைப்படங்கள், சிறப் புத் திரைப்படங்கள் என அனைத்துத் தளங்களிலும் சிறந்த முறையில் இயங்கி வருகிறார். இவரது ஒளிப்பதிவில் தமிழில் "டும் டும் டும்', "மௌனம் பேசியதே', "ராம்', "பருத்தி வீரன்', "ஆயிரத்தில் ஒருவன்', "மயக்கம் என்ன', "தனி ஒருவன்', "வேலைக்காரன்' உள்ளிட்ட படங்களும், ஹிந்தியில் "கியா கூல் ஹே ஹம்', "அப்னா சப்னா மணி மணி' மலையாளத்தில் "ஒரு யாத்ரா மாணிக்கம்', "டான் பாஸ்கோ' உள்ளிட்ட படங்களும் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.
""தற்போது வெளியாகி, பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் "ஒத்த செருப்பு - சைஸ் 7' திரைப் படத்தில் பணியாற்றியது ஒரு மிகப்பெரிய உத்வேகத்தையும், மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது என்கிறார் ராம்ஜி.