கோடம்பாக்கத்தில் தரமான, பெரிய தயாரிப்பு நிறுவனங்களை விட டுபாக்கூர் கம்பெனிகள், உப்புமா கம்பெனிகளின் ஆட்டம்தான் ஜாஸ்தியாக இருக்கிறது. வடபழனி, வளசரவாக்கம், சாலிலிகிராமம் போன்ற பகுதிகளில் ஏதாவது ஒரு பிளாட்டை வாடகைக்குப் பிடித்து ஆபீஸ் போட்டுவிடுவார்கள். சில கோஷ்டிகள், பெரிய பங்களா வைக் காட்டி "இதுதான் நம்ம ஆபீஸ்' என்பார்கள். உள்ளே போனால், அங்கே இருக்கும் பத்து கண்றாவி ரூம்களில் ஏதாவது ஒன்றில் ஒரு டேபிள், நாலு சேர்களைப் போட்டு உட்கார்ந்திருப் பார்கள்.

cinema

தயாரிப்பாளர் என்று சொல்லிக் கொண்டு ஒருவரும், டைரக்டர் எனச் சொல்லிக்கொண்டு ஒருவரும் காலையிலேயே வந்து இந்த பாடாவதி ஆபீசில் உட்கார்ந்து விடுவார்கள்.

Advertisment

அவர்களிடம் சான்ஸ் கேட்டுவரும் அசிஸ்டென்டுகள், மியூசிக் டைரக்டர்களிடம் ""நம்ம படத்தோட கதைய டெல்லில ஆரம்பிக்கிறோம்.

manobalaஅப்படியே இந்தியா முழுக்க டிராவல் ஆகி சென்னையில முடிக்கிறோம்.

ஏப்பா நீதான் என்னோட அசோஸியேட். பத்து லட்சத்துல ஒரு பையனைப் புடி. ஹீரோவாப் போட்டு படத்தை ஸ்டார்ட் பண்ணிருவோம்'' என கொக்கியைப் போடுவார்கள். இதுல சிக்குறவன் அத்தோட செத்தான்.

Advertisment

அடுத்ததாக அவர்களின் கொடூரப்பார்வை ஹீரோயின் சான்ஸ் கேட்டுவரும் இளம்பெண்கள்மீது விழும். ""ஹீரோன்னா கொடு, ஹீரோயின்னா படு. இதான் நம் பாலிஸி. ஏ.ஸி. ரூம், பெட் பெட் ரெடி. "அது'க்கு ஓ.கே.ன்னா நீ ஹீரோயின்'' என ஓப்பனாகவே சொல்வார்கள். இவர்களிடம் இருந்து தப்பிக்கும் கிளிகளும் உண்டு. சிக்கிச்சீரழியும் கிளிகளும் உண்டு.

அந்த மாதிரி ஒரு டூபாக்கூர் கம்பெனியிடம் மாட்டிக்கொண்டு தெறித்து ஓடிய நடிகர்- நடிகைகளின் சங்கதிதான் இது.

madhumitha"அகிலா' இதுதான் அந்தப் படத்தின் டைட்டில். "சித்து +2'வின் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி, காமெடி நடிகை மதுமிதா, நடிகர்கள் மனோபாலா, இமான் அண்ணாச்சி ஆகியோரைக் கமிட் பண்ணிவிட்டு, மகாபலிபுரத்தில் 15 நாட்கள் ஷூட்டிங் ஷெட்யூலும் போட்டார்கள். எல்லாருக்கும் டெய்லி பேமென்ட் என சர்க்கரையாகப் பேசினார்கள். மகாபலிபுரத்துக்கு முன்பாக ஒரு ஊரில் லாட்ஜ் அறைகளையும் புக் பண்ணிவிட்டு ஆர்டிஸ்ட்டுகளை அழைத்துக் கொண்டு ஷூட்டிங் கிளம்பினார்கள்.

போய் இறங்கிய முதல் நாளே அனைவருக்கும் தெரிந்துவிட்டது, அது கேவலமான லாட்ஜ் என்று. ""இன்னைக்கு மட்டும்தான் இது, நாளைக்கு சூப்பர் லாட்ஜ்'' என சமாதானப் படுத்தியிருக்கிறார் கம்பெனியின் கேஷியர். சரி என சகித்துக் கொண்டார்கள் நடிகர்- நடிகைகள். ஆனால் இரண்டாவது நாளும் அதே கண்றாவிதான். ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே, தண்ணியைப் போட்டுவிட்டு தனது சேட்டையை காட்ட ஆரம்பித்தார் கேஷியர்.

கேஷியரின் ஏடாகூடத்தைப் பார்த்த காஸ்ட்யூம் டிசைனர் பெண்மணி யாரிடமும் சொல்லாமல் ஓட்டம் எடுத்தார். மூன்று நாட்களும் பேமெண்ட் வராததால் கமிட் பண்ணப்பட்ட நடிகர்- நடிகைகளும் போங்கடா நீங்களும் ஆச்சு, ஒங்க கம்பெனியும் ஆச்சு என நொந்தபடி சென்னைக்கு பறந்துவந்துவிட்டார்கள்.

எப்படியெல்லாம் சினிமா எடுக்குறாய்ங்க பாருங்க.

-கைப்புள்ள