"களவாணி-2'-வின் கடைசிக் கட்ட ஷூட்டிங் தஞ்சாவூர் ஏரியாக்களில் நடந்துகொண்டிருந்தது.
ஹீரோ விமல் மற்றும் கேரக்டர் ஆர்டிஸ்டுகளுக்கு வேறு படங்களின் ஷூட்டிங் இருந்ததால், விறுவிறுப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார் டைரக்டர் சற்குணம்.
ஆனால் ஹீரோயின் ஓவியாவோ, எதையும் சட்டை செய்யாமல் (ஓவியா எதுக்குய்யா சட்டை செய்யணும்?
அதுக்குத்தான் வேற காஸ்ட்யூம் இருக்கேன்னு உங்களோட மைண்ட் வாய்ஸ் கே
"களவாணி-2'-வின் கடைசிக் கட்ட ஷூட்டிங் தஞ்சாவூர் ஏரியாக்களில் நடந்துகொண்டிருந்தது.
ஹீரோ விமல் மற்றும் கேரக்டர் ஆர்டிஸ்டுகளுக்கு வேறு படங்களின் ஷூட்டிங் இருந்ததால், விறுவிறுப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார் டைரக்டர் சற்குணம்.
ஆனால் ஹீரோயின் ஓவியாவோ, எதையும் சட்டை செய்யாமல் (ஓவியா எதுக்குய்யா சட்டை செய்யணும்?
அதுக்குத்தான் வேற காஸ்ட்யூம் இருக்கேன்னு உங்களோட மைண்ட் வாய்ஸ் கேக்கத்தான் செய்யுது. ஆனா இதுவேற சட்டை) ஃபேஸ்புக், நெட் சாட், இன்ஸ்டாகிராம்னு நோண்டிக்கிட்டே இருந்தாராம். இதனால் கடுப்பான சற்குணம், ""அம்மா தாயி.. நீ கௌம்பு! மூணு நாள் சின்னச் சின்ன பேட்ச் ஒர்க்கை, ஒனக்குப் பதிலா வேற ஆள வச்சு மேட்ச் பண்ணிக்கிறேன்''னு சொல்லி சென்னைக்கு வண்டி ஏத்திவிட்டுட்டாராம்.
சிவகார்த்திகேயன்- சமந்தா- கீர்த்தி சுரேஷ்- டைரக்டர் பொன். ராம் டைரக்ஷனில் தயாரான "சீமராஜா'-வின் ஷூட்டிங் 95% முடிந்துவிட்டதாம். மிக்ஸிங்கும் சிஜி ஒர்க்கும் வேகமாக போய்க்கொண்டிருக்கிறதாம். சிவகார்த்திகேயன் டப்பிங் பேசி முடித்துவிட்டாராம். சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் டப்பிங் பேச வேண்டியது மூணு நாள் தானாம்.
ஆனால் இன்னும் முடிந்த பாடில்லையாம்.
""என்னை படுக்கக் கூப்பிட்டார்கள்'' என பட்டவர்த்தனமாக பேட்டி கொடுக்கும் ஹீரோயின்கள் லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் இந்தி பிரபலம் மல்லிகா ஷெராவத்.'' "மர்டர்' என்ற இந்திப் படம்மூலம்தான் ஃபேமஸானேன். அப்ப ஒரு கிழவன் என்னைப் படுத்துனபாட்ல ரத்தமே வந்துருச்சு. அந்த மூணு நாள்-னு கூடப்பார்க்காம சித்ரவதை பண்ணுனான்.
அப்ப எனக்கு உதவ யாருமே வரல. அவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஒருவழியா இந்திப் படங்களில் கமிட் ஆனேன்.
அப்ப ரெண்டு மூணு ஹீரோக்கள் (இப்பவும் அவர்கள் இருக்கிறார்கள்) சீன்ல நாம நெருக்கமா இருக்கிற மாதிரி, தனி ரூம்ல நெருக்கமா இருந்தா சந்தோஷமா இருக்கும், என்ன ஓ.கே.வா என ஓப்பனாகவே கேட்டார்கள். நான் மாட்டேன்னதும் பல படங்களிலிருந்து என்னை நீக்கிவிட்டார்கள். நான் யார்கூடவும் தனியா படுத்ததில்லை, அப்படிப்பட்ட ஆளு நான் இல்லை'' என சங்கட்டமே படாம சொல்லிருக்காரு மல்லிகா ஷெராவத்.
வாடி என் ராசாத்தி, அப்படின்னா அந்த மெக்ஸிகோ கப்பல் ஓனர் யாருன்னு சொல்லிட்டா புண்ணியமா போகும்!