உங்களைப் பற்றி...? ""பிறந்தது இந்தியா. படிச் சது ஆஸ்திரே லியா. படிப்பு முடிச்சதும் ஆஸ்திரேலியா வில வேலைக்குச் சேர்ந்தேன். அப் போது அழகிப் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத் தது. அந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒரே இந்தியப் பெண் நான் மட்டுமே. முதல் முயற்சி யிலேயே "மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட்' பட்டம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் "மிஸ் இந்தியா குளோபல்' பட்டம் கிடைத்தது. பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. என் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். அதன்பிறகு தெலுங்கில் "நாடகம்' படத்தின்மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளி வந்த "ஜெர்ஸி' படமும் பெரிய ஹிட். இப்போது தமிழில் "கொலைகாரன்'. இந்த மூன்று படங்கள்மூலம் ஹாட்ரிக் சக்சஸ் அடித்ததில் மகிழ்ச்சி...
"கொலைகாரன்' அனுபவம்...?
"கொலைகாரன்' என்னுடைய கேரியரில் பெரிய படம். படத்தில் நாயகியை எடுத்துவிட்டுப் பார்த்தால் படம் முழுமை அடைந்திருக்காது. அர்ஜூன், விஜய் ஆண்டனி, நாசர், சீதா போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம்.''
அடுத்து...?
""ராஜ பீமா' படத்தில் ஆரவ் ஜோடி யாக நடிக்கிறேன். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பைப் பேசும் படமாக இருக்கும். நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.
படத்துல எனக்கு டாக்டர் கேரக்டர்.
படத்தின் முக்கியமான பாத்திரத்தில் யானை நடிக்கிறது. யானையுடன் நடித்த காட்சிகள் சவாலாக இருந்தன. விலங்குகளின் டைமிங்கிற்கு ஏற்ப நடிப்பது உண்மையில் சவாலான விஷயம்.''
குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடிகிறதா?
""படப்பிடிப்புக்கு என்னு டைய அம்மா வருவதால் வீட்டில் இருப்பதுபோல் உணர்வு கிடைக்கிறது. சில சமயம் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றால் நீண்ட நாட்கள் தங்கமாட்டேன்.''
சினிமாவில் உங்களுக்கு யார் போட்டி?
""எல்லாரும் எனக்கு போட்டி தான். போட்டி இல்லாத துறை இல்லை. போட்டி இல்லை என்றால் உழைப்பு குறைந்து விடும். எந்த வேலையாக இருந்தா லும் அந்த இடத்தில் போட்டி இருக்க வேண்டும். போட்டி இல்லாமல் இருந்தால் நம்மிடம் ஏதோ குறை இருப்பதுபோல் தோன்றும்.
சான்சுக்காக நடிகைகள் பலர் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்களே...?
""மற்றவர்கள் எப்படியோ... எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உண்டு. திருமணம்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது. திருமணம் சிலருக்கு சீக்கிரம் நடக்கலாம். சிலருக்கு தாமதமாக நடக்கலாம். ஆனால் வாழ்க்கைத்துணை கண்டிப்பாக வேண்டும்.
நடிகைகள் திருமணத் தைத் தள்ளிப்போடு வது அவர்கள் சொந்த விருப்பம். இப்போது திருமணமான நடிகைகளுக் கும் பட வாய்ப்பு பிரகாசமாக உள்ளன.
பிடித்த நடிகர்...?
""நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. "தெறி', "மெர்சல்', "சர்கார்' உட பட சமீபத்திய படங்கள் அனைத்தையும் பார்த் துள்ளேன். விஜய் சார் போன்ற மாஸ் ஹீரோக் களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னைப் போன்ற வளரும் நடிகைகளுக்கு இருக்கும். எனக்கும் அப்படியொரு ஆசை உண்டு.''
பிடித்த நடிகை...?
சாவித்திரி, நயன்தாரா.
தமிழ் சினிமா பற்றி...?
""தமிழ் சினிமாவை மற்ற மொழிகளுடன் ஒப்பீடு செய்யும்போது தமிழ் படங்களின் தரம் வேறு லெவலில் இருப்பதைப் பார்க்க முடிந்தது.
ஒரு படத்தின் வெற்றி என்பது ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல.
ஒரு படக்குழு ரயில் என்ஜின் போன்றது. நீண்ட ரயில் பெட்டிகளை என்ஜின் இழுப்பது போல் படக்குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து இழுக்கும் போதுதான் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.
அப்படி விஜய் ஆண்டனி, அர்ஜுன் உட்பட நாங்கள் குழுவாக இழுத்த காரணத்தால்தான் "கொலை காரன்' படத்துக்கு வெற்றி கிடைத்தது.
ஹீரோயின் சான்ஸுக்காக "பெட் ரூம் அட்ஜஸ்மன்ட்' இருப்பதாக பல ஹீரோயின்களே ஓப்பனாக பேசியிருக்கிறார்களே?
""அட்ஜஸ்மன்ட்' இருப்பதாகச் சொல்லும் எல்லாருமே தனக்கு அந்த அனுபவம் ஏற்படவில்லை என்று சொல்வதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அதனால அவர்களைப்போல் நானும் சொல்கிறேன்... எனக்கு "அந்த அனுபவம்' இல்லை... எப்படி நம்ம சமாளிப்பு'?
-பரமு