சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் நிருபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கடந்த இரண்டு "சினிக்கூத்து' இதழ்களில் எழுதிவந்தோம். "ஹீரோக்களான பி.ஆர்.ஓ.க்கள்' என்ற தலைப்பில் கடந்த "சினிக்கூத்து' அட்டைப்படக் கட்டுரையில் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் சதீஷ்குமார் ஆகிய இருவர் குறித்தும் செய்தி வெளியிட்டிருந்தோம். கடந்த 23-ஆம் தேதி புதன்கிழமை கடைகளுக்கு "சினிக்கூத்து' இதழ் வந்ததுமே, தயாரிப்பாளர்கள் கவுன்சிலி லும், பி.ஆர்.ஓ.க்கள் யூனியனிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

pro

மறுநாள் வியாழக்கிழமை மதியம் 1.15-க்கு நம்மைத் தொடர்பு கொண்டார் சதீஷ்குமார். ""என்னைப் பற்றியும், டி. சிவா அண்ணனைப் பற்றியும் இப்படி எழுதிட்டீங்களே...'' என வருத்தத்துடன் பேச ஆரம்பித்ததும், ""அண்ணே! யார் மனசையும் புண்படுத்தணும்னு எழுதல. "சினிமா நிருபர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கமாட்டோம்... சாப்பாடு போடமாட்டோம்... வெறும் டீயும் பிஸ்கட்டும்தான் கொடுப் போம்'னு நீங்க சொல்வதை யெல்லாம் உண்மையான நிருபர் கள் உள்ளன்புடன் வரவேற்கி றோம். ஆனால், "விமர்சனம் பண்ணினால் சினிமா நிகழ்ச்சி களுக்கு அழைக்க மாட்டோம், வழக்குப் போடுவோம்' என்பதெல்லாம் சரியா...'' என நாம் கேட்டதும், மேலும் பல விளக்கங்களை சொல்லத் தொடங்கினார் சதீஷ்குமார்.

""அண்ணே! நீங்களே எழுதியிருக்கீங்க, "இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கும் இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு. இப்பவெல்லாம் ஆன்ட்ராய்டு ஃபோன் வச்சிருக்கிறவனெல்லாம் ரிப்போர்ட்டர்னு சொல்லிக்கிட்டு வந்து முன்வரிசையில் உட்கார்ந்துக்கிட்டு அட்டகாசம் பண்றான்' அப்படின்னு எழுதியிருக்கீங்க.

Advertisment

உண்மை தான்! ஒத்துக்கிறேன். இதுக்கெல்லாம் முதல் காரணமும் முழுக்காரணமும் சில பி.ஆர்.ஓ.க்கள்தான். ஆன்ட்ராய்டு ஃபோன் வச்சிருக்கிறவன், ஒரு டேபிளையும் கம்ப்யூட்ட ரையும் வீட்ல வச்சிருக்கிறவனையெல்லாம் ரிப்போர்ட்டர்னு சொல்லி, தயாரிப்பாளர் கவுன்சிலில் லிஸ்ட் கொடுத்து, சினிமா ஃபங்ஷன்களுக்கு லம்பா ஒரு அமவுண்டை வாங்கிட்டுப் போய், அதில் பாதிக்கும்மேல் அமுக்கி விடுகிறார்கள். ஆனால் அந்தப் படத்தைப் பத்திய செய்தியோ ஒருசில பத்திரிகைகளில்தான் வருது. ஒன்றரைப் பேர், நாலரைப் பேர் பார்க்குற மாதிரி ஏதாவது லிங்ல போடச் சொல்லி, "சார் உங்க பட நியூஸ் வந்திருச்சு'ன்னு பி.ஆர்.ஓ.க்கள் வித்தை காட்டுகிறார்கள்.

prr

அதேமாதிரி, உப்புமா வெப்சைட்டுகளுக்கு விளம்பரம் வாங்கிக் கொடுத்தும் கொழிக்கிறார் கள். ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்கிட்டு வந்து புரமோ ஃப்ங்ஷன் நடத்தும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். ஆனால் படத்தை ரிலீஸ் பண்ணுவதற்குள் படாத பாடுபடுகிறார்கள். கடந்த 19-ஆம் தேதி "கடாரம் கொண்டான்' பிரஸ் ஷோ நடந்தது. 23-ஆம் தேதிகூட ஒரே நாளில் சந்தானத்தின் "ஏ-1' பட புரமோவும், விஜய் சேதுபதி தயாரித்த "சென்னை பழனி மார்ஸ்' படத்தின் பிரஸ் ஷோவும் நடக்கதான் செய்தது. உண்மையான நிருபர்கள் அதில் கலந்துகொண்டனர், "ஏ-1' படம் பற்றிய செய்தியும் வந்தது. "கடாரம் கொண்டான்' படத்திற்கு நல்ல முறையில்தான் விமர்சனம் எழுதியிருந்தார்கள். "சென்னை பழனி மார்ஸ்' படத்தை விமர்சிப்பதும் "நல்லபடியாக எழுதுவதும் அவரவரின் விருப்பத்தைப் பொருத்தது.

இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் சரி, கடந்த 15 நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளிலும் சரி, கவனிக் கப்படவேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னா... சாப்பாட்டுக்கும் கவருக்கும் வருகிற டுபாக்கூர் ரிப்போர்ட்டர்களின் கூட்டம் பாதி குறைஞ்சிருச்சு. வெகுஜனங்களின் ஆதரவு பெற்ற பத்திரிகைகளின் ரிப்போர்ட்டர் கள் எதையும் எதிர்பாராமல் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

கவுன்சிலில் உட்கார்ந்துகொண்டு கட்டப் பஞ்சாயத்து பண்ணியோ, சின்ன தயாரிப்பாளர் களின் வயிற்றில் அடித்தோ பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கோ, சிவா அண்ணனுக்கோ இல்லை. அதே என்னுடைய படத்தில் வேலை பார்த்த டெக்னீஷியன்களுக்கு சம்பளப் பாக்கி வைத்திருப்பதாக எழுதியிருப்பதிலும் உண்மை இல்லை. இப்போது நான் தயாரித்து ரிலீசுக்குத் தயாராக இருக்கும் "மம்மி', "அண்டாவ காணோம்' படங்களில் பணியாற்றியிருக்கும் ஆர்ட்டிஸ்டுகளிடமோ, டெக்னீஷியன் களிடமோ கேட்டுப்பாருங்கள்... யாருக்காவது சம்பளப் பாக்கி வைத்திருக்கிறேனா என்று...!

அய்யா மூப்பனரால் அடையாளம் காணப்பட்டு, இன்றுவரை தலைவர் வாசன் பின்னால் நிற்கிறேன். அரசியல் எனது அடையாளம்! ஆனால் சினிமா தான் எனது தொழில்!

மீண்டும் அழுத்தமாகவும்... ஆணித்தரமாகவும்... சொல்கி றேன். நாங்கள் விமர்சனத் திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் தரம் தாழ்ந்து, மோசமாக, மிரட்டல் தொனியில் விமர்சிப்பதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போதிருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் இந்த வாரத்தில் நல்ல தீர்வு காணப் படும். உண்மையான பத்திரிகை யாளர்கள் அடையாளம் காணப் படுவதற்கும், உப்புமா நிருபர் கள், டுபாக்கூர் நிருபர்கள் வெளியேற்றப்படுவதற்கும் உங்களைப் போன்ற பத்திரிகை யாளர்கள் உதவவேண்டும்'' என்று அதிரடியாகவும் வேண்டுகோளாகவும் பேசினார் சதீஷ்குமார்.

நல்ல தீர்வு கிடைச்சா நல்லதுதான்...!

-ஈ.பா.பரமேஷ்வரன்