Advertisment

சின்ன நடிகையிடம் சிக்கி சீரழியும் டைரக்டர்கள்!

/idhalgal/cinikkuttu/directors-who-get-stuck-little-actress

திருச்சியைச் சேர்ந்தவர் சரண்யா.வயது என்னவோ 24-க்குள்தான் இருக் கும். சினிமாவில் பெரிய நடிகையாகியே தீருவது என்ற வெறியுடன் கோடம்பாக்கத்தில் குதித்தார். இவரின் கருப்பு நிறமும் உயரமும் பெரிய மைனசாக இருந்ததால், சினிமாவில் நடிகையாக முடியாவிட்டாலும் சின்னச் சின்ன டைரக்டர்களின் குறும்படங்களில் நடித்தார்.

Advertisment

saran

40-க்கும் மேற்பட்ட குறும்படங்க ளில் நடித்திருந்தாலும், பெரிய படங்களில் சின்ன கேரக்டரிலாவது நடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், பெரிய பெரிய டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு அலைந்தார் சரண்யா. இவரின் வசீகரப் பேச்சும், பாடி லாங்குவேஜும் பண்ணிய வேலை, அந்த பெரிய பெரிய டைரக்டர்களை, சரண்யா பின்னால் லோ லோவென அலைய வைத்தது.

Advertisment

அப்படி சரண்யாவிடம் சிக்கியவர்கள்தான் டைரக்டர்கள் மிஷ்கின், சுப்பிரமணிய சிவா, "கோலிசோடா' விஜய் மில்டன், பாலா ஆகியோர். ""எனக்குத் தேவை காசும் கேரக்டரும்தான். அதனால் எந்த அட்ஜெஸ்மென்டுக்கும் நான் தயார்!'' என ஓப்பனாகவே சிக்னல் போட்டு, பெரிய டைரக்டர்களை தனது வலையில் சிக்க வை

திருச்சியைச் சேர்ந்தவர் சரண்யா.வயது என்னவோ 24-க்குள்தான் இருக் கும். சினிமாவில் பெரிய நடிகையாகியே தீருவது என்ற வெறியுடன் கோடம்பாக்கத்தில் குதித்தார். இவரின் கருப்பு நிறமும் உயரமும் பெரிய மைனசாக இருந்ததால், சினிமாவில் நடிகையாக முடியாவிட்டாலும் சின்னச் சின்ன டைரக்டர்களின் குறும்படங்களில் நடித்தார்.

Advertisment

saran

40-க்கும் மேற்பட்ட குறும்படங்க ளில் நடித்திருந்தாலும், பெரிய படங்களில் சின்ன கேரக்டரிலாவது நடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், பெரிய பெரிய டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு அலைந்தார் சரண்யா. இவரின் வசீகரப் பேச்சும், பாடி லாங்குவேஜும் பண்ணிய வேலை, அந்த பெரிய பெரிய டைரக்டர்களை, சரண்யா பின்னால் லோ லோவென அலைய வைத்தது.

Advertisment

அப்படி சரண்யாவிடம் சிக்கியவர்கள்தான் டைரக்டர்கள் மிஷ்கின், சுப்பிரமணிய சிவா, "கோலிசோடா' விஜய் மில்டன், பாலா ஆகியோர். ""எனக்குத் தேவை காசும் கேரக்டரும்தான். அதனால் எந்த அட்ஜெஸ்மென்டுக்கும் நான் தயார்!'' என ஓப்பனாகவே சிக்னல் போட்டு, பெரிய டைரக்டர்களை தனது வலையில் சிக்க வைத்தார். ஒரு கட்டத்தில், பாலா எப்படியோ அந்த வலையில் இருந்து எஸ்கேப் பானார்.

saran

சென்னை சாலிகிராமம், காவேரி தெருவில் வசித்த சரண்யாவை டிஸ்கஷனுக்கு அழைப்பதில் பெரிய டைரக்டர்களுக்குள் கடும் போட்டியே நடக்குமாம். ஒருமுறை டைரக்டர் சுப்பிரமணிய சிவா, ராத்திரி 2 மணிக்கு சரண்யா வீட்டில் சரக்கடித்துக் கொண்டிருந்தபோது, வேறொரு நபர் வந்து கதவைத் தட்டியிருக்கிறார். "யாரு அவன்?' என சிவா கேட்டதற்கு ""புது டைரக்டர்'' என்றிருக்கிறார் சரண்யா.

மற்றொரு நாள் ராத்திரி 10 மணிக்கு, சரண்யா வீட்டிற்கு சிவா போனபோது, இன்னொரு பார்ட்டியுடன் சரக்கு அடித்துக் கொண்டிருந்தார் சரண்யா. "நாம இருக்கும்போது வேற எவண்டா சரக்கடிக்கிறது'' என்ற கோப வெறியுடன் உள்ளே பாய்ந்த சிவா, சரண்யாவை அடி பின்னி எடுத்துவிட்டார். ""அய்யோ...

அம்மா'' என்ற சரண்யாவின் அலறல் சத்தத் தால் காவேரி தெருவே களேபரமானது.

இந்தக் கண்றாவிக் கூத்துகளையெல் லாம் பார்த்த ஹவுஸ் ஓனர், உடனே வீட்டைக் காலி பண்ணும்படி சரண்யா விடம் சொல்லிவிட்டார்.

"அடி செல்லம் உன்னைப் பார்க்க ணும்போல இருக்குடி எப்ப பார்க்க லாம்?' -இது டைரக்டர் மிஷ்கின். "நைட் பார்க்கலாம்' -இது சரண்யா. "வெறும் பார்க்கலாமா அல்லது வேற எதுவும்' இது மிஷ்கின். "என்னடி பண்ணிக்கிட்டிருக்க' -இது மிஷ்கின். "குளிச்சிக்கிட்டிருக்கேன் டியர்---' இது சரண்யா. "குளிக்கிறத பிக்சர் எடுத்து அனுப்புடி' -இது மிஷ்கின். இப்படியெல்லாம், இதைவிட மோசமாகவெல்லாம் வாட்ஸ்- அப் பில் சாட் பண்ணிக் கொள்வார்களாம் மிஷ்கினும் சரண்யாவும்.

saranஏ.வி.எம். குடும்பத்தைச் சேர்ந்த மைத்ரேயாவை ஹீரோவாக நடிக்க வைக்க ஒன்றரை கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய மிஷ்கின், அதில் பாதியை சரண்யாவிடம் விட்டிருக்கிறார். மைத்ரேயாவிற்குச் சொன்ன "சைக்கோ' கதையைத் தான் உதயநிதியிடம் சொல்லி படமும் முடிவடையும் கட்டத்தில் உள்ளது. அந்த ஒன்றரை கோடி ரூபாயை, வருகிற நவம்பர் மாதத்திற்குள் மைத்ரேயாவிற்கு மிஷ்கின் செட்டில் பண்ணாவிட்டால், "சைக்கோ'வை ரிலீஸ் பண்ண முடியாது என்ற பஞ்சாயத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்து வருகிறார் விஜய் மில்டன். இவரும் பல லட்சங்களை சரண்யாவிற்கு வாரி இறைத் துள்ளார். ஒருமுறை விஜய் மில்டன் ஹைதராபாத்தில் இருந்தபோது, "ஹலோ டியர்' இன்னைக்கு எனக்கு பெர்த்டே. கிஃப்ட் எதுவும் இல்லையா?'' என வாட்ஸ்- அப் பில் செல்லமாக சிணுங்கியிருக்கிறார் சரண்யா. பொம்பளப் புள்ள சிணுங் குனா ஆம்பளைக்கு தாங்குமா? ஹைதராபாத்தில் இருந்தபடியே ஆன்லைனில் காஸ்ட்லியான காஸ்ட் யூமை புக் பண்ணி, சென்னையில் இருக்கும் சரண்யாவிற்கு அனுப்பி யிருக்கிறார்.

இப்படிப்பட்ட கண்றாவிக் கூத்து களையெல்லாம் ஒரு வருடத்திற்கு முன்பே நமது "சினிக்கூத்து' இதழில் எழுதியிருந்தோம்.

சில மாதங்கள் சரண்யாவை விட்டு விலகியிருந்த டைரக்டர் சுப்பிரமணிய சிவா, இப்போது சரண்யாவே கதி என கிடக்கிறாராம். தனுஷ் ரசிகர் மன்ற மாநிலச் செயலாளராகவும் இருப்பதால், சென்னை வடபழனியில் இருக்கும் காஸ்ட்லியான ஜெயின் அபார்ட் மென்டில் வீடு ஒன்றை எடுத்துக் கொடுத்தி ருந்தார் தனுஷ். மாத வாடகை மற்றும் இதர செலவுகளை தனுஷின் "ஒண்டர்பார் கம்பெனி' தான் செய்து வந்திருக்கிறது.

சரண்யா பண்ணிய மேஜிக் வேலை களில் சிக்கிய அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவர்மூலம் ஒண்டர்பார் கம்பெனியிலேயே அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகிவிட்டார் சரண்யாவும். இது சிவாவிற்கு ரொம்பவே வசதியாகப் போய்விட்டது. அங்கே வேலைக் குச் சேர்ந்ததும், சரண்யா பண்ணிய முதல் வேலையே, வேலைக்குச் சேர்த்துவிட்ட அசிஸ்டென்டுக்கு ஆப்பு வைத்ததுதான்.

தான் சினிமாவிற்கு வந்த புதிதில், தனக்கு ஆதரவளித்த நண்பர்களை உதறித் தள்ளி னார் சுப்பிரமணிய சிவா. "வெள்ளை யானை' படத்தில் "பிச்சைக்காரன்' மூர்த்தி மனைவி கேரக்டரில் சரண்யாவை போடும் அளவிற்குப் போய்விட்டார் சுப்பிரமணிய சிவா. சரண்யாவே கதி என கிடந்தததால், "வெள்ளை யானை'யும் ரிலீஸ் ஆகமுடியாமல் முடங்கிக் கிடக்கிறது. சிவாவும் சரண்யா வும் அடிக்கும் கூத்துகளைக் கேள்விப்பட்ட தனுஷ், வடபழனி பிளாட்டைக் காலி பண்ணச் சொல்லிவிட்டதால், இப்போது அசோக் நகரில் ஆபீஸ் போட்டிருக்கிறார் சுப்பிரமணிய சிவா.

இந்த பெரிய டைரக்டர்கள் சிக்கியது பத்தாது என்று "விஜய் டி.வி.' ராமரும் சரண்யா வுடன் வாட்ஸ்- அப்பில் செம செக்ஸியாக சாட் பண்ணிக் கொண்டிருக்காராம்.

இதுக்குமேல நாம சொல்றதுக்கு என்ன இருக்கு பாஸ்?

-ஈ.பா. பரமேஷ்வரன்

cini221019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe