இயக்குநர்கள் விரும்புவதில்லை'' -ஜோதிகா ஓப்பன் டாக்!

/idhalgal/cinikkuttu/directors-do-not-jothika-open-dog

திருமணத்துக்குப்பிறகு, பெண்களுக்கு முக்கி யத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துவருகிறார் ஜோதிகா. "காற்றின் மொழி' படம் பார்த்துவிட்டு பலர் பாராட்டிவருகிறார்கள் என்று உற்சா கத்துடன் பேசத் தொடங்கினார் ஜோதிகா.

பெண்களுக்கு முக்கியத்துமுள்ள கதைகளில் மட்டுமே நடிப்பது ஏன்?

இதேமாதிரி கதைகள்தான் என்னைத் தேடிவரு கின்றன. பெண் இயக்குநர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவு. ஆண் இயக்குநர்கள் இந்த மாதிரிக் கதைகள்தான் எழுதுகிறார்கள். எனக்கு வந்த கதைகளில்

திருமணத்துக்குப்பிறகு, பெண்களுக்கு முக்கி யத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துவருகிறார் ஜோதிகா. "காற்றின் மொழி' படம் பார்த்துவிட்டு பலர் பாராட்டிவருகிறார்கள் என்று உற்சா கத்துடன் பேசத் தொடங்கினார் ஜோதிகா.

பெண்களுக்கு முக்கியத்துமுள்ள கதைகளில் மட்டுமே நடிப்பது ஏன்?

இதேமாதிரி கதைகள்தான் என்னைத் தேடிவரு கின்றன. பெண் இயக்குநர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவு. ஆண் இயக்குநர்கள் இந்த மாதிரிக் கதைகள்தான் எழுதுகிறார்கள். எனக்கு வந்த கதைகளில் நல்லதாகத் தேர்வுசெய்து நடிக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத் தல், சாதியக் கொலைகள் எல்லாம் சமூகத்தில் நிகழவில்லை. இப்போது அதைச் சார்ந்த கதைகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

"குஷி 2-'வில் நடிப்பீர்களா?

கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் "குஷி' மாதிரி கதை இருக்கக் கூடாது. கொஞ்சம் புத்திசாலி ஜெனி பராகக் ("குஷி' படத்தின் ஜோதிகாவின் பெயர்) காட்டினால் நடிப்பேன். ஏனென்றால் அந்த இடத்துக்கு வந்துட்டேன்.

jothika

பயோபிக்கல் படங்களில் நடிப்பீர்களா?

குறிப்பிட்ட ஒருவரது பயோபிக்கில் நடிக்க வேண்டுமென்ற ஆசை எதுவுமில்லை. ஆனால் பயோபிக்கில் நடிக்க விருப்பம் உண்டு. படங்களில் மனைவி கதாபாத்திரத்தில் நடிப்பதே பயோபிக் மாதிரி தான். தற்போது வீட்டிலிருக்கும் பெண்கள் ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் பயோபிக்தான். நல்ல கதைகள் வந்தால், அந்தக் கதாபாத்திரத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயார்.

சூர்யாவிடம் கதை பற்றிப் பேசுவீர்களா?

அவர்தான் எனக்கு எல்லாமே. கதைகள் தொடர்பான முடிவு என்னுடையதுதான். அவருக்கு வரும் கதை கள், எனக்கு வரும் கதைகள் இரண் டையுமே பேசித் தான் ஓ.கே சொல் வோம். என்னோட கதை களில் அவரோ, அவரு டைய கதைகளில் நானோ குறுக்கிட மாட்டோம். கருத்துப் பகிர்தல் மட்டுமே இருக்கும்.

படங்களில் இருவருமே இணைந்து நடிக்கக் காத் திருக்கிறோம். இதுவரை யாருமே எங்களை அணுக வில்லை. நிஜவாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்த வர்கள், திரையில் காதலித்து நடிப்பதை இயக்குநர்கள் விரும்பு வதில்லை என நினைக்கிறேன்.

தற்போதைய நாயகிகளில் யாரைப் பிடிக்கும்?

நயன்தாரா நடிப்புப் பிடித்திருக்கிறது. "கோலமாவு கோகிலா'-வை தியேட்டரில் போய்ப் பார்த்தேன். கீர்த்தி சுரேஷும் பிரமா தமாகப் பண்றாங்க.

*உங்கள் குழந்தைகள் தியா, தேவ் என்ன சொல்கிறார்கள்?

எனது படங்களைப் பார்த்துச் சந்தோஷப் படுறாங்க. என் பொண்ணுக்கு நான் புல்லட் ஓட்டிட்டு வரும் காட்சி ரொம்ப பிடிக்கும். தினமும் ஸ்கூலுக்கு பைக்கில் வந்து பிக்-அப் பண்ணு அம்மா என்று சொல்லிட்டு இருக்காங்க. இரண்டுமுறை அதையும் செய்தேன்.

cine181218
இதையும் படியுங்கள்
Subscribe