எஸ். விஜயசேகரன் இயக்கத்தில் உருவான "எவனும் புத்தனில்லை ' படத்தின் விழாவில் மீ டூ விவகாரம் பற்றி இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பொளந்து கட்டினார்.
""இது என்ன மீ டூ.? ஏ டூ பி டூ?
இங்கே என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே புரியவில்லை.
ஒரு ஆணும் இன்னொரு ஆணும் உடலுறவு கொள்ளவும், ஒரு பெண் ணும் இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் அனுமதி கொடுக்கிறது சட்டம்.
எஸ். விஜயசேகரன் இயக்கத்தில் உருவான "எவனும் புத்தனில்லை ' படத்தின் விழாவில் மீ டூ விவகாரம் பற்றி இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பொளந்து கட்டினார்.
""இது என்ன மீ டூ.? ஏ டூ பி டூ?
இங்கே என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே புரியவில்லை.
ஒரு ஆணும் இன்னொரு ஆணும் உடலுறவு கொள்ளவும், ஒரு பெண் ணும் இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் அனுமதி கொடுக்கிறது சட்டம்.
ஒரு ஆண், ஒரு பெண் உறவு கொள்வது தவறு என்கிறது.
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கவரப்பட்டு உறவு கொள்வது எப்படி தவறாகும்?
அப்படி கவரப் படாமல் போனால் பிறப்பு என்கிற லிலிங்கே விடுபட்டுப்போகும்.
இதுபோல் பிரச்சினை வராமல் இருக்கவே நான் படப்பிடிப்பு ஆரம்பித்த உடனேயே ஹீரோயின்களைத் திட்டியும் அடித்தும் விடுவேன். அதற்குப்பிறகு எப்படி என்கிட்டே நெருங்குவார்கள்?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yashika_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sunina.jpg)
என் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த், கமல், விஜய் காந்த், கார்த்திக் எல்லாருமே கட்சி ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு அப்படி ஒரு ராசியோ என்னவோ?
சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்க வில்லை என்று புகார் சொல்லும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.
தரமான படங்களாக எடுங்கள். மக்கள் ரசிக்கிற மாதிரி படங்களை எடுங்கள். தியேட்டர் தருவார்கள்.
நான் வரிவிலக்குக்காக பல படங்களைப் பார்த்திருக்கிறேன். அதில் பெரும்பாலான படங்கள் குப்பையோ குப்பை!
அப்படி ஒரு படத்தை எவன் காசு கொடுத்து பார்ப்பான்? அப்புறம் எப்படி தியேட்டர் கிடைக்கும்?
இந்த பத்திரிகைகாரங்க பாவம்! எவ்வளவு குப்பைப் படமாக இருந்தாலும் இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து தண்டனையை அனுபவித்தே வருகிறார்கள். படம் ஆரம்பித்த உடனேயே டைரக்டர் வெளியே வந்து விடுகிறார்.
பத்திரிகையாளர்களும் இந்த சீனுக்கு அடுத்த சீனும் நல்லா இருக்கும். பாராட்டி எழுதுவோமே என்று கடைசி வரை பார்த்துவிடுகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/leelina.jpg)
பத்திரிகையாளர்களைப் பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது'' என்றார்.
விழாவில் இயக்குநர் தளபதி, நடிகர்கள் நபி நந்தி, சரத், சுவாசிகா எலிசபெத், சுப்புராஜ், இயக்குநர் எஸ். விஜயசேகரன், இசையமைப் பாளர் மரியா மனோகர் ஆகியோர் பேசினார்கள்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us