இயக்குநர் சரண் இயக்கும் "மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.' படத்தில் நடிகர் ஆரவ்வுடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல்.
""நான் இந்தப் படத்தில் ஆரவ்வின் காதலியாக நடித்திருக்கிறேன். மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார்'' என்கிறார்.
நிகிஷா படேல் தற்போது ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்து, இயக்குநர் எழில் இயக்கும் "திகில்' படத்திலும் இணைந்துள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.