சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் புதுப்படம், "சண்டக்கோழி-2', "கவரிமான் பரம்பரை' என ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டு செம பிஸியாக இருக்கிறார் காமெடி நடிகர் முனீஸ்காந்த்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் எதிர்பாராதவிதமாக ஜெ
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் புதுப்படம், "சண்டக்கோழி-2', "கவரிமான் பரம்பரை' என ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டு செம பிஸியாக இருக்கிறார் காமெடி நடிகர் முனீஸ்காந்த்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் எதிர்பாராதவிதமாக ஜெயிலுக்குப் போகிறான். அந்த ஜெயில் அவனை எப்படியெல்லாம் கெட்டவனாக்கி, சென்னையே மிரளும் தாதாவாக்குகிறது என்பதை ரத்தமும் சதையுமாக "வடசென்னை'-யில் பதிவு செய்திருக்கிறாராம் வெற்றிமாறன்.
தெலுங்கு ஹீரோ பிரபாஸிடம் கதை சொல்லிலிவிட்டுக் காத்திருக்கிறாராம் டைரக்டர் அட்லீ.
கவுதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் ஜோடியை வைத்து "தேவராட்டம்' எடுத்துவருகிறார் முத்தையா. இதில் மெயின் காமெடியனாக சூரியும் சைடு காமெடி யனாக "வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வாழைத்தார் சீன் புகழ் பவுன்ராஜும் நடிக்கிறார்கள். "ரொம்ப பெரிய டயலாக்கையெல்லாம் பவுன்ராஜ்கிட்ட கொடுக்காதீங்க, என்கிட்ட கொடுங்க' என முத்தையாவுக்கு அன்புத் தொல்லை கொடுக்கிறாராம் சூரி.
ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் படப்பிடிப்பை முடித்து ஆயுத பூஜையன்று "சண்டக்கோழி-2'-யை ரிலீஸ் பண்ணிவிடவேண்டும் என்ற வேகத்துடன் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது லிலிங்குசாமி- விஷால் கூட்டணி.
இசை அமைப்பாளர் இமானிடம் பாட்டெழுத வாய்ப்புக் கேட்டுச் செல்லும் கவிஞர்களை, இமானின் அப்பாதான் முதலிலில் இன்டர்வியூ பண்ணுவாராம். இன்டர்யூவெல்லாம் முடிந்தபின் இப்போதைக்கு சான்ஸ் இல்லை எனச் சொல்லி அனுப்பிவிடுகிறாராம்.