ம் பிக்சர்ஸ் பட நிறுவனம் "கருத்துக்களை பதிவு செய்' என்னும் ஹாரர் படத்தைத் தயாரிக்கிறது.

Advertisment

இதில் லட்சிய நடிகர் மறைந்த எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர். ஆர்யன் நாயகனாக அறிமுக மாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

Advertisment

மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள்தான்.

cஒளிப்பதிவு- மனோகர், இசை- கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள்- சொற்கோ, கலை- மனோ, எடிட்டிங்- மாருதி, நடனம்- எஸ்.எல்.பாலாஜி, தயாரிப்பு மேற்பார்வை- டி.பி. வெங்கடேசன், கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர். இணைத் தயாரிப்பு- ஜே.எஸ்.கே. கோபி. இயக்குநர் பொறுப்பேற்றிருப்பவர் ராகுல். இவர் ஏற்கெ னவே "ஜித்தன் 2', "1 ஆ.ங' என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே ஹாரர் டைப் படங்கள்.

""பொள்ளாச்சி பாலியல் சம்பவங் கள் பலவற்றை என் "கருத்துகளை பதிவு செய்' படத்தில் நான் ஏற்கெ னவே பதிவு செய்திருக்கிறேன். படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முடிவடையும் கட்டத்தில் இருக்கும் சூழலில் பொள்ளாச்சி சம்பவம் பெரிதாக வெடித்திருக்கிறது. நானும் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு தான் என்பதை அப்போதே பதிவு செய்திருந்தேன். பெத்தவங்க பிள்ளைகளுக்கு போனை வாங்கிக் கொடுப்பதாக நினைக்கிறாங்க... இல்லவே இல்லை பிசாசத்தான் வாங்கிக் கொடுக்கிறாங்க'' என்றார் ராகுல்.

Advertisment