ந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியானவர் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண்.

renukadesai

இவரும் நடிகை ரேணுகா தேசாயும் காதலிலித்துக் கல்யாணம் செய்துகொண்டவர்கள். காதல் தம்பதிகளுக்கு ஒரு மகனும் இருக்க மனம் ஒத்துவராமல் இருவரும் விவாகரத்து பண்ணிக்கொண்டார்கள்.

Advertisment

மகனுக்குப் பத்து வயதாகிவிட்ட நிலையில் புனேவைச் சேர்ந்த தொழிலதிபரை இரண்டாவது கல்யாணம் பண்ணும் முடிவுக்கு வந்து நிச்சய தார்த்தத்தையும் முடித்து விட்டார் ரேணுகாதேசாய்.

renukadesai

அந்த நிச்சய தார்த்தப் போட்டோவை இன்ஸ்டா கிராமிலும் ரிலீஸ் பண்ணிவிட்டார். இதைப் பார்த்துக் கடுப்பான பவனின் அடிப்பொடி ரசிகர்கள், இன்னொரு கல்யாணம் பண்ணுனா வெட்டுவோம் என ரேணுகா தேசாயை பகிரங்கமாக மிரட்டி வருகிறார்களாம்.

அட அப்ரண்டிசுகளா யாரு யாரைக் கல்யாணம் பண்ணுனா உங்களுக்கு ஏன்யா வேர்க்குது. இருங்கடி உங்களுக்கெல்லாம் ஸ்ரீரெட்டிதான் சரியான ஆளு. ஆனாலும் அரண்டு போன ரேணுகா, கல்யாணம் நடக்கும் இடத்தை கோயம்புத் தூருக்கு மாத்திட்டாராம்.

Advertisment