த்து வருஷத்துக்கு முன்னாலவரைக்கும் தமிழ் சினிமாவும் அந்த சினிமாவை ஓட்டும் தியேட்டர்களும் நல்ல செழிப்பாத்தான் இருந்துச்சு. பிலிலிமில் படம் எடுத்து, அதை லேப்பில் கழுவி, ரீல் பெட்டிகளில் அடைத்து, பஸ், டிரெய்ன்களில் அந்தப் படப்பெட்டியை அனுப்பி, அதை விநியோகஸ் தர்கள் டெலிலிவரி எடுத்து, ஹீரோக்களைப் பொருத்து அதிக விலை கேட்கும் தியேட்டர்காரர்களுக்குக் கொடுத்து, 50 நாள், 100 நாள், 175 நாள், 250 நாள் ஓடி வெற்றி விழா, வெள்ளி விழா கொண்டாடிய காலமெல்லாம் போயே போச்சு.

theater-strike

நவீன டெக்னாலஜி, டிஜிட்டல் சிஸ்டம், சூப்பர் குவாலிலிட்டி என்ற பெயரில் கியூப் கம்பெனி வந்த பின்னாடி ஒட்டுமொத்த சினிமாவுக்கே கிறுக்குப் பிடிக்காத குறை தான். 2ஃ, 4ஃ சவுண்ட் ட்ராக்சிஸ்டம் அப்படி இப்படின்னு சொல்லிலி தன்னோட மிஷின் இலவசம் எனச் சொல்லிதியேட்டர்களில் இறக்கியது கியூப். மிஷினை வச்சபின்னாடிதான், ""வெறும் மெயிண்டெனன்ஸ் சார்ஜ் வாரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய்தான், மிஷினை நாங்களே ஃப்ரீயா சர்வீஸ் பண்ணிக் கொடுத்துருவோம்''னு பிட்டைப் போட்டது கியூப்.

சீக்குப் பிடிச்ச ஊருல சீவி சிங்காரிச்சு ஒருத்தி வந்தா அவளையே குறுகுறுன்னு பாக்குற மாதிரி கியூப் வந்ததும் தியேட்டர்காரர்களும் சரண்டரானார்கள். தயாரிப்பாளர்களும் கியூப்பின் சூழ்ச்சி தெரியாமல் சிக்கினார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் 1,100 தியேட்டர்களில் 800 தியேட்டர்கள் கியூப்பின் வசம் மாட்டிக்கொண்டது.

Advertisment

shra

வாரக்கட்டணம் 15 ஆயிரம் ரூபாய்போக, தியேட்டர்களில் ஒளிபரப் பப்படும் விளம்பரக் கட்டணத்தையும் (அந்த வகையில் 15,000 ரூபாய்) தியேட்டர்காரர்களுக்கே தெரியாமல் லபக்கியது கியூப். எல்லாத்தையும் கூட்டிக் கழித்து, வகுத்து, பெருக்கிப் பார்த்தால் கடந்த 10 வருடங்களில் 800 கோடி ரூபாயைத் தின்று கொழுத்திருக்கிறது கியூப்.

கியூப்பின் இந்தக் கேடித் தனத்தைக் கண்டித்துத்தான் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

Advertisment

shakshi-agarwal

ஸ்டிரைக் அறிவித்து ஒரு மாதத்தை நெருங்கிவிட்ட நிலையில், புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகாததால், தியேட்டர்களும் ஈ ஓட்டிக் கொண்டிருக் கின்றன. கியூப்புடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால், தடாலடி முடிவுக்கு வந்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

அதாவது சங்கத்தின் முக்கியப் புள்ளிகள் நால்வர் சேர்ந்து கியூப் போன்ற ஒரு கம்பெனியை ஆரம்பிப்பது என்றும் கியூப்பைவிட பாதிக்கட்டணம் வசூலிப்பது என்றும் முடிவு செய்துள்ளார்களாம். இன்னும் சில நாட்களிலோ அல்லது இந்த இதழ் விற்பனையில் இருக்கும்போதோ, சினிமா ஸ்டிரைக் வாபஸ் என்ற இனிய அறிவிப்பு வரலாம். ""மூணு நாளில் நல்ல முடிவு எட்டப்படும்''னு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் 29-ஆம் தேதி அறிவிச்சுட்டாரு. அதனால் சினிமாவை மட்டுமே நம்பியிருக்கும் தொழிலாள வர்க்கத்துக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி கிடைக்கலாம்.

midi

தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்திருக்கும் இன்னொரு மிகமிக அதிமுக்கியத்துவம் வாய்ந்த முடிவு என்னன்னா, பத்திரிகையாளர்களை வரன்முறைப்படுத்தும் திட்டம்.

அதாவது சினிமா நிகழ்ச்சிகளுக்கு உப்புமா பத்திரிகையாளர்களும் உப்புச்சப்பு பெறாத பத்திரிகைகளிலிருந்தும் நிருபர்கள் என்ற பெயரில் வந்து அதகளப்படுத்துவார்கள். டுபாக்கூர் பத்திரிகையாளர்களின் அட்டகாசத்துக்குக் கடிவாளம் போடும்விதமாக, இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கமே அடையாள அட்டை கொடுத்துவிடுமாம். இந்த அடையாள அட்டை உள்ளவர்கள்தான் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியுமாம்.

இந்த முடிவு, நல்ல முடிவு, வரவேற்க வேண்டிய முடிவு.

meenakshi

(சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஜில்லுன்னு இருக்கட்டுமேன் னும் லே-அவுட் அட்ராக்ஷனுக்காகவும் தான் ஹீரோயின் ஸ்டில்ஸ் இருக்குதே தவிர, இந்த மேட்டருக்கும் இதுக்கும் சத்தியமா சம்பந்தமேயில்லை.

என்னண்ணே கவர்ச்சிப்படமே இல்லை, ஒரே கட்டமா இருக்குன்னு சங்கட்டமா கேட்ட லே-அவுட் ஆர்டிஸ்டையும் கூல் பண்ணிட்டோம்ல.)