டந்த 8-ஆம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கள் சங்கத்தின் ஆலோசனைக் குழு மற்றும் தென்னிந்திய திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாளர்கள் யூனியனின் கூட்டுக்கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்தபின் கூட்டறிக்கை ஒன்று வெளியானது. அதில், "இன்றுமுதல் (8-7-2019) தமிழ் சினிமாக்களின் பூஜை, ஆடியோ ரிலீஸ், டிரைலர் ரிலீஸ், பிரஸ் ஷோ, சக்சஸ் மீட், பிரஸ்மீட் உட்பட தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு எந்தவித அன்பளிப்பும் வழங்கப்படமாட்டாது. வெறும் டீயும் பிஸ்கட்டும்தான் கொடுக்கப்படும். அதேபோல் விமர்சனம் என்ற பெயரில் திரைப்படங்களையோ, நடிகர்- நடிகைகளையோ தரக்குறைவாக விமர்சிக்கும் எந்த ஒரு நபரையும் அழைப்பதில்லை என்றும், விமர்சிப்பவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இருதரப்பிலும் பேசி, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதை அனைத்துத் தயாரிப்பாளர்களும், பி.ஆர்.ஓ. யூனியன் உறுப்பினர்களும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்,' என்று கூறப் பட்டிருந்தது.

dd

""அடடா சூப்பர்... ரொம்ப கரெக்டான அறிக்கை! கரெக்டான நேரத்துல வந்திருக்கு'' என உண்மையான, உருப்படியான பத்திரிகையாளர்களும், இணையதள செய்தியாளர் களும் மனம் திறந்து பாராட்டி னார்கள். அதேநேரம் அறிக்கை யின் கடைசி வரிகளில், "விமர்சித்தால் நடவடிக்கை' என்ற வரிகள்தான் பத்திரிகை யாளர்கள் மத்தியில் கடுப்பைக் கிளப்பியது.

""என்ன திடீர்னு இந்த அறிக்கை, இப்போது ஏனிந்த அறிக்கை?''

Advertisment

முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களைத் தயாரித்த, சினிமா தயாரிப்பில் 30 வருடங்கள் அனுபவமுள்ள தயாரிப்பாளர் ஒருவரிடம் விசாரித்தோம்.

""சார், சினிமா ஃபீல்டில் இந்த கவர் சமாச்சாரத்தை யார் ஆரம்பிச்சு வச்சதுன்னு தெரியாது. 25 வருஷத்துக்கு முன்னால சினிமா நிகழ்ச்சி களுக்கோ, பிரஸ் ஷோக் களுக்கோ, அதிகபட்சம் 30 நிருபர்கள் வருவார்கள். சம்பந்தப்பட்ட படத்தின் நாலு ஃபோட்டோக்களை கவரில் போட்டு, பி.ஆர்.ஓ.க்கள் கொடுப்பார்கள். அந்த ஃபோட்டோக்கள் அப்போதி ருந்த பத்திரிகை நிலவரப்படி பிளாக் & ஒயிட்டில் வரும். அதை விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் பார்த்து வியாபாரம் பேச வருவார்கள்.

ஆனால் இப்ப நிலவரம் அப்படியா இருக்கு?

Advertisment

dd

ரொம்பவே கலவரமா இருக்கு... ஒரு டேபிளும் ஒரு கம்ப்யூட்டரும் வச்சுக்கிட்டு நானும் "டாட்.காம்' ரிப்போர்ட்டர்னு கிளம்பி வந்துர்றாங்க.

அவர்களைத்தான் முன் வரிசையில் அமரவைத்து, கெக்க பிக்கேன்னு கேள்விகளைக் கேட்க வைக்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள். ஒருமுறை, இசைஞானி இளையராஜாவும் டைரக்டர் மகேந்திரனும் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, ""மிஸ்டர் மகேந்திரன்' உங்களோட முதல் படம் எது?''ன்னு ஒரு டாட்.காம் பார்ட்டி கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி... இசைஞானி கடுப்பாகி, "அவரை முதல்ல வெளியே அனுப்புங்க'ன்னு சொல்ற லெவலுக்குப் போயிருச்சு'' என நான் ஸ்டாப்பாகப் பேசியவர், ""இருங்க... ஒரு டம்ளர் தண்ணி குடிச்சுட்டுப் பேசுறேன்'' என ரிலாக்சாகிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

""இப்பல்லாம் சினிமா பிரஸ்மீட்டோ, ஃபங்ஷனோ, பிரஸ் ஷோவோ, பெரிய பெரிய அரசியல் கட்சிகளின் பொதுக் குழுவிற்கு கூடும் கூட்டம் போல பிரஸ் பீப்பிள் வர்றாங்க. அந்தச் செலவு, இந்தச் செலவுன்னு தாவு தீர்ந்து போகுது. அதைக் கண்ட்ரோல் பண்ணத் தான் இப்படி ஒரு முடிவெடுத் திருக்காங்கன்னு நினைக் கிறேன். ஆனா எங்க ஆளுங்க ளும் லேசுப்பட்ட ஆளுங்க இல்ல. ஒரு படத்தையோ, ஹீரோ வையோ நார் நாராகக் கிழிச்சுத் தொங்கவிடும் "புளுசட்டை' மாறன், பிரசாந்த் மாதிரியான ஆட்களை தனியாக கவனித்து குளிப்பாட்டிவிடுகிறார்கள். இதுல பல புரோக்கர்களும் உள்ளே புகுந்து உப்புமா வெப்சைட்டுகளுக்கு விளம்பரம் என்ற பெயரில் கமிஷன் அடிப் படையில் லட்சக்கணக்கில் வாங்கிக்கொடுத்து கொளுக் கிறார்கள். வெகுஜனப் பத்திரி கையாளர்கள் பெரும்பாலும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதனால உப்புமா நிருபர்களை ஃபில்டர் பண்ணி, உண்மை யான, உருப்படியான நிருபர் களை அடையாளம் கண்டாலே போதும். தேவையில்லாத அக்கப் போர்களெல்லாம் நடக்காது'' என உண்மை நிலவரத்தை நம்மிடம் பேசினார் அந்தத் தயாரிப்பாளர்.

"விமர்சித்தால் சட்டப்படி நடவடிக்கை' என மிரட்டும் தொனியில் இருக்கும் அந்த அறிக்கை குறித்து 25 ஆண்டுகளுக்கும்மேலாக சினிமா நிருபராக இருக்கும் நமது நண்பரிடம் கேட்டோம். ""இதுவும் ஒருவகை ஜெயலலிதா யிஸம், மோடியிஸம்தான்.

அவர்கள் இருவருக்கும்தான் யார் விமர்சித்தாலும் பிடிக்காது. விமர்சித்தால் கேஸ்தான், ஜெயில்தான். படம் நல்லாயிருந்துச்சுன்னா, அந்தப் படத்தை தலையில் தூக்கிவைத்து பத்திரிகைகள் கொண்டாடும். மக்களும் கொண்டாடுவார்கள். இதெல் லாம் யாராவது சொல்லியா செய்றோம்?

அதேமாதிரி "ஹரஹர மகாதேவகி'-யில் கௌதம் கார்த்திக்கும் நிக்கி கல்ராணி யும் அடிக்கும் கண்றாவிக் கூத்துகளை சகிக்கமுடியாது. "இருட்டு அறையில் முரட்டுக் குத்து' யாஷிகா ஆனந்தின் அருவருப்பான சேட்டைகளை எந்த ரகத்தில் சேர்ப்பது? இந்த மாதிரி கேவலமான படங்களை பாராட்டியா எழுதமுடியும்? இந்த லட்சணத்துல "பல்லு படாம பார்த்து செய்யுங்க'ன்னு ஒரு படம் தயாராகுதாம். எல்லாரும் ஒழுங்கா இருந்தா எல்லாமும் ஒழுங்கா இருக்கும்'' என நிதர்சனத்தை போட்டு டைத்தார்.

இதையெல்லாம் நல்லா யோசிங்க சங்கத்தார்களே!

-ஈ.பா. பரமேஷ்வரன்