"பிரேமம்' மலையாளப் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமானார் சாய்பல்லவி. மணிரத்னத்தின் "காற்று வெளியிடை' பட வாய்ப்பையே மறுத்தவர் சாய்பல்லவி.

Advertisment

saipallavi

மலையாளத்திலும் தெலுங்கிலும் பிஸியாக இருப்பவர் சாய்பல்லவி. ரொம்ப திமிர் பிடிச்ச பெண் என சாய்பல்லவியை கரிச்சுக் கொட்டினார்கள் தெலுங்கு ஹீரோக்கள் சிலர்.

Advertisment

ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாச ராவ் மகனும் தெலுங்கு சினிமா ஹீரோவுமான ரவிதேஜாவை திடீரென சாய்பல்லவி கல்யாணம் பண்ணிக் கொண்டதாக, படீரென ஒரு நியூஸ் பரவியது. ""அப்படியெல்லாம் எதுவும் நடக்கல. ஏற்கனவே கல்யாணம் ஆகி, குழந்தையுடன் இருக்கும் எனது மகனின் வாழ்க்கையைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே யாரோ வதந்தியைப் பரப்பியிருக்கிறார்கள்'' என தடாலடியாக மறுத்தார் கல்வி மந்திரி. இது சாய்பல்லவி சைடிலிருந்து வந்துருக்குமோ என்ற டவுட்டும் இருக்கிறது.

saipallavimiskin

தமிழில் எந்த பெரிய ஹீரோவுடனும் இதுவரை சாய்பல்லவி நடிக்கவில்லை. இந்த நிலைமையிலதான், கே. பாக்யராஜ் மகன் சாந்தனுவை ஹீரோவாகப் போட்டு, மிஷ்கின் டைரக்ட் பண்ணும் படத்திற்கு சாய்பல்லவியிடம் கால்ஷீட் கேட்டபோது, "அந்தப் பையன்கூடவெல்லாம் நடிக்கமாட்டேன்' எனச் சொல்லி எரிச்சலைக் கிளப்பியிருக்கிறார் சாய்பல்லவி.

Advertisment

ஏம்மா சாய்பல்லவி என்னம்மா ஆச்சு உனக்கு?

-பரமேஷ்