ல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது ஆண்டு தோறும் வழங்குவது வழக்கம். எட்டு ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் இருந்த கலைமாமணி விருதுப் பட்டியலை கடந்த வாரம் அறிவித்தது தமிழக அரசு. சினிமாத் துறையில் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் கலைமாமணிகள்தான் இவர்கள்.

kalaimamani

kalaimamani

Advertisment

2012-ஆம் ஆண்டு: சித்ரா லட்சுமணன், கானா உலகநாதன். 2013-ஆம் ஆண்டு: பிரசன்னா, நளினி, பாண்டியராஜன், டி.பி. கஜேந்திரன், ஜூடோ ரத்னம், பரவை முனியம்மா. 2014-ஆம் ஆண்டு: கார்த்தி, பொன்வண்ணன், சரவணன், டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா, டான்ஸ் மாஸ்டர் தாரா, மூத்த பத்திரிகையாளர் kalaimamaniஃபிலிம் நியூஸ் ஆனந்தன். 2015-ஆம் ஆண்டு: பிரபுதேவா, இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி, டைரக்டர் பவித்ரன், கவிஞர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு கானா பாலா. 2016-ஆம் ஆண்டு: சசிகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, மூத்த பத்திரிகை யாளர் நெல்லை சுந்தர்ராஜன். 2017-ஆம் ஆண்டு: விஜய் சேதுபதி, இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகை ப்ரியாமணி. 2018-ஆம் ஆண்டு: நடிகர் ஸ்ரீகாந்த், சந்தானம், தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், இயற்றமிழ் பிரிவில் பத்திரிகையாளர் மணவை பொன். மாணிக்கம்.

நெல்லை சுந்தர்ராஜன், சித்ரா லட்சுமணன், மணவை பொன். மாணிக்கம் ஆகியோர் சார்பில் சினிமா பி.ஆர்.ஓ. யூனியனைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத் தலைவர் தேனிசைத் தென்றல் தேவாவைச் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு துளசி பழனிவேல், துணைத்தலைவர் ராமானுஜம் மற்றும் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisment