லைநகர் டெல்லியில் "ருபரு மிஸ் இந்தியா எலைட் 2019' போட்டியில் மொத்தம் 20 இளம்பெண்கள் கலந்துகொண்டனர். அதில் சென்னையைச் சேர்ந்த அபூர்வி சைனிதான் "ருபரு மிஸ் ஃபேஸ் ஆஃப் பியூட்டி இந்தியா- 2019' பட்டத்தைத் தட்டி வந்திருக்கிறார்.

b

பட்டம் வாங்கிய கையோடு மீடியா மக்களை சந்தித்தபோது, ""உத்தரப்பிரதேசம்தான் சொந்த ஊர் என்றாலும் மும்பையில செட்டில் ஆகிட் டோம். நான் இங்கே எஸ்.ஆர்.எம். காலேஜ்ல படிக்கிறேன். படிச்சுக் கிட்டிருக்கும்போதே இந்தப் போட்டியில கலந்துக்கிட்டு பட்டம் வாங்கியது ரொம்ப ஹேப்பியா இருக்கு. சமூக சேவையிலும் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னோட முதல் எய்ம்.

அதுக்கப்புறம் மத்த மொழிகளில் சான்ஸ் கிடைச்சா போதும்'' என முழுக்க முழுக்க இங்கிலீஷிலேயே பேசினார் அபூர்வி சைனி. போதுமே... இது ஒண்ணு போதுமே... தமிழ்ப் படத்துல நடிக்கிறதுக்கு! தமிழ் பேசத் தெரிஞ்சாத்தான் தப்பு.