"செயல்' படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் என்ன சொல்றாருன்னா...
""எனக்கு சின்ன வயதிலிலிருந்தே சினிமாமீது ஆர்வம் இருந்தது.
அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாக மாறிச்சி.
அந்த நேரத்தில் டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்தபோது அவர் ஒரு கதையைச் சொன்னார்.
எனக்கு எந்தமாதிரியான கதையில் நடிக்கணும்னு ஆர்வம் இருந்ததோ அதற்கு ஏற்றமாதிரியான கதையாக இருந்ததால் நடிக்க ஓ.கே சொன்னேன்.
சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே தயாரிக்க முன்வந்தார்.
அப்படி ஆரம்பித்ததுதான் "செயல்.'
விஜய்யை வைத்து "ஷாஜகான்' படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடத்துக்குப்பிறகு இயக்குகிற இரண்டாவது படத்தில் நான் நடிக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே...
இந்தப் படத்தில் எனக்கு ஆக்ஷன் இருக்கு. காமெடி இருக்கு. லவ் இருக்கு. முதல் படத்திலேயே பக்கா கமர்ஷியல் கதை கிடைச்சிருக்கு..
இந்தப் படம் தரமா வந்திருக்கு என்ற நம்பிக்கை அப்பா சி.ஆர். ராஜனுக்கு வந்ததால் உடனே அடுத்த படத்தையும் தொடங்கிவிட்டார்.
சமுத்திரகனி உதவியாளர் சாய் சங்கர் இயக்கத்தில் "குமாரு வேலைக்கு போறான்' என்று டைட்டில் வைத்திருக்கோம்'' என்றார் நம்பிக்கை யுடன்.