"பிக்பாஸ்' பிரபலங்கள் என்றாலே பெரிய பிராப்ளம் என்றாகிவிட்டது. "பிக்பாஸ்-1'-ல் ஓவியா- ஆரவ் லவ் ரொம்பவே டீப்பாகி, கத்தியால் கையைக் கிழிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியதால், "பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டார் ஓவியா. அதன்பின் சில மாதங்கள் கேரளாவில் ஓய்வெடுத்த ஓவியா, சென்னை திரும்பியதும் ஆரவ்வுடன் கோயிங் ஸ்டெடி ஸ்டைலில் வாழ்க்கை நடத்தினார், நடத்திக்கொண்டிருக்கிறார்.

s

அதே "பிக்பாஸ்-1'-ல் ஏடாகூடமாகவும் மண்டைக் கர்வமாகவும் பேசி, நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசனே கண்டிக்கும் அளவுக்கு சண்டியர்தனமாக நடந்துகொண்டார் காயத்ரி ரகுராம். "பிக்பாஸ்' வீட்டைவிட்டு வெளியேவந்த பின்னும் காயத்ரியின் ராவடி ssதொடரத்தான் செய்தது. அதே 1-ல் இருந்த ஜூலியும் சர்ச்சைகளில் சிக்கினார், வெளியேறினார். இளைஞர் ஒருவருடன் இப்போது நெருக்கமாகவும் படுநெருக்கமாகவும் வாழ்ந்துவருகிறார்.

Advertisment

"பிக்பாஸ்-2' சீசனில் சிக்கியவர் தாடி பாலாஜி. "பிக்பாஸ்' வீட்டிற்குள் என்ட்ரியாகும் நிகழ்ச்சிக்கு தாடி பாலாஜியின் மனைவி நித்யாவும் பெண் குழந்தையும் வந்திருந்தனர். மகிழ்ச்சி கரைபுரண்டோட தனது கணவரை "பிக்பாஸ்' வீட்டுக்குள் அனுப்பிவைத்தார் நித்யா. "பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியே வந்ததும், ""அய்யய்யோ... என் பொண்டாட்டிய ஆயிரம் விளக்கு சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் தள்ளிட்டுப் போய்ட்டாரே'' என ஒப்பாரி வைத்தார் தாடி பாலாஜி.

"பிக்பாஸ்-3' சீசனிலோ ஏகப்பட்ட அக்கப் போர்கள், தெருக்கூத்துக்கள். இலங்கையைச் சேர்ந்த மாடலிங் நடிகையான லாஸ்லியாவை ஆளாளுக்கு ரவுண்ட் கட்டி கிண்டல் அடித்ததால் வெடித்து அழுதுவிட்டார். லாஸ்லியாவுக்கு ஆறுதலாக இருந்தது டைரக்டர் சேரன் மட்டுமே. "பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியே வருவதற்குள் தங்களது மகள் அதே வீட்டிலிருக்கும் சண்டியுடன் சண்டிங் அடித்துவிடுவாளோ என பயந்து அலறிவிட்டனர் லாஸ்லியாவின் பெற்றோர்கள். நல்லவேளை அப்படி எதுவும் நடப்பதற்குள் "பிக்பாஸ்' வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் லாஸ்லியா. இப்போது தமிழ் சினிமாவில் என்ட்ரியாகும் எண்ணத்துடன் போட்டோ ஷூட் ஸ்டில்ஸை ரிலீஸ் பண்ணிவருகிறார்.

அதே 3 சீசனில் சேரனை அவமானப்படுத்துவதே லட்சியம் என்ற குறிக்கோளுடன் பாதியில் நுழைந்தவர் மீராமிதுன். அழகிப் போட்டி பிரச்சினையில் மீராமிதுனை விசாரிக்க "பிக்பாஸ்' வீட்டிற்குள் போலீஸ் போன கூத்தும் நடந்தது.

Advertisment

அதே-3-ல் வனிதா விஜயகுமார் நடத்திய பெருங்கூத்துகள் உலகப் பிரசித்தம் பெற்றது. இதற்கடுத்து, "பிக்பாஸ்' நிகழ்ச்சித் தயாரிப்பாளர்மீதே சம்பளப் பிரச்சினையைக் கிளப்பி அதிரடி காட்டினார் காமெடி நடிகை மதுமிதா.

இப்ப லேட்டஸ்டாக அம்பலத்திற்கு வந்து நொம்பலப்பட்டுக் கொண்டிருப்பவர் அதே சீசன்-3-யின் தர்ஷன்தான். இலங்கையைச் சேர்ந்த விளம்பரப் படங்களின் நடிகரான தர்ஷனை டீப்புன்னா டீப்பு அப்படி ஒரு டீப்பா லவ் பண்ணினார் மாடலிங் கும் சினிமா நடிகையுமான ஷனம் ஷெட்டி. "பிக்பாஸ்' வீட்டிலிருந்து தர்ஷன் வெளியே வந்ததும், அவரை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கும் அளவுக்கு காதல் பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்தார் ஷனம் ஷெட்டி.

""தர்ஷன் என்னோட மகன் மாதிரி. ஷனம் ஷெட்டியை உயிருக்கும் மேலாகக் காதலிப்பதை என்னிடம் பலமுறை சொல்லிருக்கான். நான் வெளியே போனதும் அவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்துவைப்பேன் என ஓப்பனாகவே பேசினார் அதே "பிக்பாஸ்' வீட்டிலிருந்த ஃபாத்திமா பாபு. "பிக்பாஸ்' வீட்டிலிருந்தபோதே அபிராமி... அபிராமி... என சக போட்டியாளர்மீது காதல் வலையை வீசினார் தர்ஷன். அந்த வலை அந்துபோனதால் ஷெரின்மீது லவ் அம்புவிட்டார் தர்ஷன். இப்படியெல்லாம் "பிக்பாஸ்' வீட்டுக்குள் காதல் கூத்துக்கள் அரங்கேறின.

ss

"பிக்பாஸ்' வீட்டிற்குள் தர்ஷன் இருந்தபோது ஷனம் ஷெட்டியின் போக்கு கோக்குமாக்காகப் போய்க் கொண்டிருந்தது. "பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியே வந்ததும் தர்ஷனின் போக்கு ஏறுக்குமாறாகப் போனது.

இப்படிப்பட்ட நேரத்தில்தான், ஜனவரி 31-ஆம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார் ஷனம் ஷெட்டி. ""இலங்கையில் மாடலிங் பண்ணிக்கொண்டிருந்த தர்ஷனை நான்தான் சென்னைக்கு அழைத்துவந்து இங்கும் மாடலிங் வாய்ப்புகள் வாங்கிக்கொடுத்தேன். சினிமாவிலும் அவனை ஹீரோவாக்கும் வேலைகளில் இறங்கி, அவனை வைத்து சொந்தமாக படம் தயாரிக்க முடிவு பண்ணி, பூஜையும் போட்டேன்.

அவனுக்காக 15 லட்ச ரூபாய்க்குமேல் செலவு செய்துள்ளேன். பல வெளிநாடுகளுக்குச் சென்று இன்பமாக இருந்துள்ளோம். இங்கே சென்னை சாஸ்திரி நகரில் இருக்கும் எனது வீட்டில் பல மாதங்களாக இரவு- பகல் பாராமல் ஒரே கட்டிலில் தூங்கியுள்ளோம். என்னை கல்யாணம் செய்துகொள்வதாகச் சொன்னதால், எனது பெற்றோர் கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பின்தான் அவனுக்கு "பிக்பாஸ்' வாய்ப்பு கிடைத்தது.

"பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியே வந்ததும் அவனது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. பல நடிகர்களுடன் எனக்கு தப்பான உறவு இருப்பதாகச் சொன்னான். நான் நீச்சல்குளத்தில் டூ பீஸ் டிரஸ்ஸில் இருக்கும் போட்டோவையும், நீச்சல் குளத்தில் இருந்தபடியே நான் கொடுத்த பேட்டியையும் தப்பாகச் சொன்னான். சினிமா நடிகையான நான் டூ பீஸ் போடுவதில் என்ன தப்பு?

அதனால் என்னை ஏமாற்றிய தர்ஷன்மீது ஆக்ஷன் எடுங்க'' என கண்ணீர் மல்க புகார் மனுவைக் கொடுத்துவிட்டுத் திரும்பினார்.

ss

""அடக்கொடுமையே! எதெதுக்கு புகார் கொடுக்கணும்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு! நமக்கு இருக்கும் ஆயிரம் அக்கப்போர்களில் இதுக்கெல்லாமா பஞ்சாயத்து பண்ணமுடியும்?'' என தலையில் அடித்துக்கொண்டார்கள் கமிஷனர் அலுவலக போலீஸ் அதிகாரிகள்.

ஷனம் ஷெட்டியின் தடாலடியைப் பார்த்து கதிகலங்கிப்போன தர்ஷன், பிப். 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுத்தார். ""ஷனம் ஷெட்டி என்மீது கோபப்பட்டாலும் நான் கோபப்பட்டு கோர்ட்டுக்குப் போகமாட்டேன்.

அவரின் நடவடிக்கைகள் கோணல் மாணலாக போனதால்தான் விலகினேன்'' என்றார்.

தர்ஷன் பேட்டி கொடுத்துமுடித்த ஒரு மணி நேரத்தில், சில வெப்சைட் பார்ட்டிகளைத் தொடர்புகொண்ட ஷனம் ஷெட்டி, ""இப்ப பிரஸ் மீட்ல தர்ஷன் போட்டிருந்த சட்டைகூட நான் வாங்கிக் கொடுத்ததுதான்'' என மானத்தை வாங்கினார்.

அந்த லவ் ஜோடிகளுக்குள் என்னதான் பிரச்சினை... என தர்ஷன் -ஷனம் ஷெட்டி நட்பு வட்டாரத்தில் கொக்கியைப் போட்டோம். ""இம்புட்டுக்கும் காரணம் "வேட்டை மன்னன்' சிம்பு தாங்க. நயன்தாரா வாழ்க்கையில விளையாண்டாரு. அப்புறம் ஹன்சிகாவுக்கு தூண்டில் போட்டாரு. இப்பகூட கல்யாணமாகி குழந்தை குட்டிகள் பெத்த சீனியர் நடிகைகள் இரண்டுபேரை விடாம துரத்திக்கிட்டிருக்காரு. அதில் ஒரு நடிகைக்கு சிம்புவின் சேட்டைகள் ரொம்பவே பிடித்துப் போய், அப்பப்ப மீட் பண்ணி, ரிலாக்ஸ் ஆக்கிக்கொள்வார்.

பட்டினப்பாக்கத்தில் இருக்கும் ஒரு ஸ்டார் ஓட்டல் பஃப்தான் சிம்புவின் மீட்டிங் பாயிண்ட். அங்கே மிகமிக காஸ்ட்லியான போதை ஐட்டங்கள் கிடைக்கும்.

சேட்டைகளை கம்மி பண்றதுக்காக அப்பப்ப சபரிமலைக்கு மாலை போடுவாரு. மலை ஏறி இறங்கியதும் மீண்டும் சேட்டை... மலை ஏறுவார். இப்ப ஷனம் ஷெட்டியும் சிம்புவும் சரக்கும் தண்ணியும் மாதிரி மிக்ஸ் ஆகியிருப்பது தெரிந்ததும் தர்ஷன் விலகிட்டார். இப்பக் கூட சிம்பு ஐடியாப்படிதான் தர்ஷனை கேவலப்படுத்திருக் கார் ஷனம் ஷெட்டி'' என்கிறார் கள்.

ss

இன்னொரு தரப்போ, ""நடிகைன்னா நாலு காசு சம்பாதிச்சு செட்டில் ஆகணும்தான் நினைப்பாங்க. அதையெல்லாம் லென்ஸ் வச்சுப் பார்த்துக்கிட்டிருந்தா சரிப்படாது. இப்பக்கூட முன்னணி நடிகைகள் சிலரின் பின்னணியைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் கட்டிய கணவர்கள் கண்கலங்காமல் இருக்கிறார்கள். "பிக்பாஸ்' வீட்டுக்குள் இருந்த ஷெரினையும் காதலித்தார் தர்ஷன்.

அந்த ஷெரின் என்னடான்னா இப்ப எக்குத்தப்பா பிகினி டிரெஸ்ல போஸ் கொடுக்குது. ஏன் இப்படின்னு ஷெரினிடம் போய் தர்ஷன் கேட்கமுடியுமா? பணமும் போச்சு... வாழ்க்கையும் போச்சுங்கிற கடுப்புலதான் கமிஷனர் ஆபீஸ் போயிருக்கார் ஷனம் ஷெட்டி. இவ்வளவு நாளா ஷனம் ஷெட்டியையும் அவரது பணத்தையும் அனுபவித்த தர்ஷனுக்கு ஷனம் ஷெட்டியை சந்தேகப்பட யோக்கியதை இல்லை'' என்கிறது.

இரண்டு தரப்பும் சொல்வது நியாயமாத்தான் இருக்கு.

இரண்டு தரப்புக்கும் சம்பந்தமில்லாத இன்னொரு நபரோ, ""இதெல்லாமே விஜய் டி.வி. பண்ற கூத்துக்கள்தான். ஏன்னா இன்னும் நாலு மாசத்துல "பிக்பாஸ்-4' ஆரம்பிக்கப்போகுது. ஏற்கெனவே இருந்த "பிக்பாஸ்' பிரபலங்கள்மீது புழுதி கிளப்புறமாதிரி கிளப்பி ஆக்டிங் பண்ணவைக்குது. யாரு கண்டா இதே ஷனம் ஷெட்டிகூட "பிக்பாஸ்-4'-க் குள் போகலாம். நான் சொல்றது கரெக்ட்தானே'' என்கிறார்.

ஆமாமா இதுவும் கரெக்ட்டாத்தான் தோணுது.

-ஈ.பா. பரமேஷ்வரன்