ஒரு தாய் தனது மகனுக்காகத் தன் வாழ் நாளையே தியாகம் செய்து விதவையாக வாழும் வாழ்க்கை தான் "ஆத்தா' படத்தின் கதை.
ஒரு மனிதனை மனிதனாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர சாதி, மதத்தோடு பார்க்கக்கூடாது. சாதி ஒரு மனிதனின் அடையாளமே தவிர, ஒரு மனிதனின் வாழ்க்கையோ கௌரவமோ கிடையாது. சாதி ஒரு மனநோய் என்பதை உணர்த்தி, ஆணவப் படுகொலைகளை ஒழிக்கும் கதைக்கு அழகாக திரைக்கதை எழுதியுள் ளார் இயக்குநர் ஜீன்ஸ்காந்த் .
"பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த கருப்பி நாய் ஹீரோவாக நடிக்கிறது.
சத்தியராஜ், சரண்யா முக்கிய கதாபாத்திரத் தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. படத்தில் இரண்டு காதநாயாகி இஸ்மத் பானு, சுரேஸ்லேகா நடிக்கின்றனர்.
தேனி, வீரபாண்டி, கம்பம், கோம்பை, மேகமலை போன்ற இடங்களில் படப் பிடிப்பு நடைபெறுகிறது.