தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஆரம்பிச்சு வச்சாலும் வச்சாரு ஆந்திர சினிமாவே அலறிப்போயும் நாறிப்போயும் கெடக்கு. ""என்கூடப் படுத்தவர்களின் பட்டியலே எங்கிட்ட இருக்கு. ஒவ்வொரு பேரா ரிலீஸ் பண்ணுவேன்'' எனச் சொன்ன ஸ்ரீரெட்டி, நடிகர் சங்க காம்பவுண்டுக்குள் ஒவ்வொரு துணியா கழட்டி வீசி, அரை நிர்வாணமா நின்னாரு. "அப்படியெல்லாம் நின்னது தப்பு'ன்னு சில பேரும் "சரிதான்'னு பலபேரும் சொன்னாக.
ஸ்ரீரெட்டி படுக்கை லிலிஸ்ட்ல நம்ம பேரும் இருக்குமோன்னு பதட்டப்பட்டாரு ஆந்திர சினிமா பவர் ஸ்டாரான பவன் கல்யாண். சிரஞ்சீவி தம்பியான இவரு, அங்க ஒரு கட்சியும் நடத்திக் கிட்டிருக்காரு. அரசியல்வாதிங்கிற கெத்துல, ""ஸ்ரீரெட்டி பண்ணுவது அத்தனையும் சில்லரைத்தனம், போக்கிரித்தனம்'' என பொளந்து கட்டினார்.
விடுவாரா ஸ்ரீரெட்டி? ""பவன் கல்யாண் யோக்கியதை எனக்குத் தெரியாதா? மூணு கல்யாணம் பண்ணி, ஒரு பொண்ணைக்கூட வச்சு வாழத்தெரியாத யோக்கியரு என்னப் பார்த்துப் பேசுறாரு பேச்சு. பவன் கல்யாண் ஒரு இவரு'' என விரல்மூலம் ஆபாச சைகை காட்டி, கலங்கடித்தார் ஸ்ரீரெட்டி.
சும்மா விட்ருவாய்ங்களா பவன் கல்யாணின் ரசிக சிகாமணிகள்? ""உய்ய்ய்ய்ய்.. எங்க அண்ணணைப் பத்திப் பேச நீ யாருடி? வருமானத்துக்கு வழியில்லைன்னா விபச்சார விடுதி நடத்து. இனிமே எங்க தலைவரப்பத்தி தப்பாப் பேசுனா, நீ உயிரோடு இருக்கமாட்டே. போட்டுத் தள்ளிருவோம். ஜாக்கிரதை!'' என ஓப்பனாகவே மிரட்டத் தொடங்கினார்கள்.
""போங்கடா போக்கத்த பயலுகளா. இந்த அரட்டல், உருட்டல் வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க. ஏய்ய்ய்ய்ய்ய்ய்.. பவன் கல்யாண் ஒன்னோட ஆளுங்கள அடக்கிவை.
ரசிகர்கள்ங்கிற பேர்ல ரவுடிகளை வச்சு மிரட்டும் வேலை தொடர்ந்தா போலீசுக்குப் போவேன், கோர்ட்டுக்குப் போவேன்'' என சொர்ணாக்கா ரேஞ்சுக்கு எகிறி அடித்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.
போற போக்கப் பார்த்தா ஆந்திராவுல மிகப்பெரிய அட்டாக் நடக்கும்போல. ஆனா எந்த மாதிரியான அட்டாக்குன்னுதான் தெரியல.