விஜய்- நயன்தாரா- அட்லீ காம்பினேஷனில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் பாதிக் கதை அந்தமானில் நடக்கிறதாம்.

யன்தாராவுக்கு ஹிட் கொடுத்த "கோலமாவு கோகிலா'-வின் டைரக்டர் நெல்சன், மீண்டும் ஒரு சூப்பர் கதையை நயனுக்குச் சொல்லியுள்ளாராம். இந்தப் படத்தையும் லைக்காதான் தயாரிக்கிறதாம்

nayanthara

கப்பட்ட கடனில் தத்தளித்தாலும் சென்னை அபிராமபுரத்தில் நான்கு கோடி ரூபாயில் வீடு வாங்கியிருக்காராம் விஜய் ஆன்டனி. காமெடி நடிகர் யோகி பாபு, வளசரவாக்கத்தில் மூன்றரைக் கோடி ரூபாய்க்கு வீடு வாங்கிருக்காராம்.

Advertisment

பாடல் ஆசிரியர் சினேகனிடம் பாடல் எழுதக் கேட்டுப் போனால் பாட்டு ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் கேட்டு அலறவிடுகிறாராம்.

""இனிமேல் சினிமாவில் பாடமாட்டேன், நடிக்கமாட்டேன்'' எனச் சொல்லிவந்தவர் கானா பாலா. என்ன நினைத்தாரோ, இப்போது சில படங்களில் பாடியும் நடித்தும் வருகிறார்.

"பச்சை என்கிற காத்து', "மெர்லின்', "பறை' படங்களின் டைரக்டர் கீரா, இப்போது எம்.ஜி.ஆரின் பேரனை ஹீரோவாகப் போட்டு "குறவன்' படத்தை டைரக்ட் பண்ணிவருகிறார்.

Advertisment

prabudeva

ர்.பி. சௌத்ரியின் சூப்பர்குட் பிலிலிம்ஸ்க்கு கதை சொல்லப் போகும் புது டைரக்டர்களிடம் கதை கேட்பவர் கம்பெனியின் மேனேஜர் சின்னச்சாமிதான். இந்த வாரம் வாங்க, அடுத்த வாரம் வாங்க என கதை சொல்ல வருபவர்களை வருடக் கணக்கில் அலையவிட்டு நொந்து நொம்பலமாக்கிவிடுவாராம் சின்னச்சாமி.

பிரபுதேவா- நிக்கி கல்ராணி காம்பினேஷனில் டி.சிவா தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் டைரக்னில் தயாரானது "சார்லிலி சாப்ளின்-2.' ஆனால் படமோ போணியாகாமல் தத்தளிக்கிறது. ரிலீஸ் விஷயமாக தயாரிப்பு கவுன்சில் பார்ட்டி ஒருவரை ஷக்தி சிதம்பரம் சந்தித்தபோது, ""பெரிய ஹீரோக்களின் மார்க்கெட்டே ததிகினத்தோம் போடுது. பிரபுதேவா படமெல்லாம் ரிலீசாகுறது ரொம்ப கஷ்டம்யா'' என்றாராம் அந்த பார்ட்டி.

agarwal

ருணாஸ் நடித்த "சங்கத் தலைவன்' படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்களாம். ""அண்ணன் ஜெயிலுக்குப் போய்ட்டுவந்த நேரமோ என்னமோ தெரியல, சினிமாவும் டல்லடிக்குதே'' என கவலைப்படுகிறார்கள் கருணாசின் தொண்டர்கள்.

வினய்யை வைத்து "செவத்தக் காளை செந்தட்டிக் காளை'’ படத்தை எடுத்தார் டைரக்டர் சரண். படம் முடிந்து ஒரு வருஷத்திற்கு மேலாகியும் போணியாகவில்லை. ஆனாலும் அசராத சரண், இப்போது ஆரியை வைத்து "மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.' என்ற படத்தை ஆரம்பித்து சென்னையைச் சுற்றியுள்ள ஏரியாக்களில் செம ஸ்பீடாக ஷூட்டிங் நடத்திவருகிறார். ஆந்திராவிலிருந்து புதுமுகமான காவ்யா தாப்பரை ஹீரோயினாக அறிமுகம் செய்கிறார் சரண். டைரக்டர் சரணின் 18-ஆவது அறிமுகம்தான் காவ்யா தாப்பர்.

anuksha

சோனியா அகர்வாலை வைத்து "ஒரு நடிகையின் வாக்குமூலம்' எடுத்த டைரக்டர் ராஜ்கிருஷ்ணா, இப்போது மீண்டும் bitspongalசோனியா அகர்வாலை வைத்து’ "அறியாத வயசு' படத்தை ஆரம்பிக்கவுள்ளார் விஜய்சேதுபதிக்கு தகுந்தமாதிரி ஒரு கதை சொல்லியிருக்காராம் "சீமராஜா' பொன்.ராம். படத்தை தயாரிப்பது கார்த்திக் சுப்புராஜ். கையில் இருக்கும் படங்களை முடித்துக்கொடுக்க ஒரு வருடம் ஆகும் என்பதால், அதுவரை பொன்.ராமை காத்திருக்கச் சொல்லிருக்காராம் விஜய்சேதுபதி

"சதுரங்க வேட்டை-2' எடுத்த நிர்மல்குமார், இப்போது விக்ரம்பிரபுவை வைத்து ஆக்ஷன் படம் ஒன்றை எடுத்து வருகிறார். "பக்கா' என்ற ஒரு குப்பைப் படத்தில் நடித்து விக்ரம்பிரபுவின் மார்க்கெட் டவுணாகியிருந்த நேரத்தில் "துப்பாக்கிமுனை' அவரைக் காப்பாற்றியது. இனிமேல் டைரக்டர்களின் ஏரியாவுக்குள் மூக்கை நுழைப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் விக்ரம்பிரபு.

சென்னை மாநகர போலீசின் ஏற்பாட்டில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார் யோகிபாபு. மக்களுக்கான விழிப்புணர்வுப் படம் என்பதால், குறும்படத்தை டைரக்ட் பண்ணிய விக்னேஷ் சிவனும், நடித்த யோகிபாபுவும் சம்பள விஷயத்தில் தாராளமாக நடந்து கொண்டார்களாம்.

டைரக்டர் ராஜமௌலியின் மகன் திருமணத்தின்போது பிரபாசும் அனுஷ்காவும் காட்டிய நெருக்கம், மீண்டும் அவர்களுக்குள் காதல் பத்திக்கிச்சு என்ற சேதியைக் கிளப்பிவிட்டுள்ளது. உடம்பில் தேங்கியிருந்த தேவையற்ற கொழுப்பைக் குறைக்க அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அனுஷ்கா, இப்போது செம ஸ்லிம்மாகிவிட்டார். அதனால் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார்.